அமெரிக்க வரி விதிப்பால் உலகில் குழப்பமான சூழல் – ஜெய்சங்கர்

“அமெரிக்க அதிபர், பரஸ்பர வரி விதிப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், வங்கக் கடல் ஒத்துழைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பின்போது, குழப்பமான உலக சூழல் நிலவி வரும் நிலையில், அதை எதிர்கொள்ள இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்,” என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

நம் அண்டை நாடான பாகிஸ்தானுடன் இருதரப்பு உறவு கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், 2016ல் அந்த நாட்டில் நடந்த சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டை இந்தியா புறக்கணித்தது.

இதைத் தொடர்ந்து, சார்க் அமைப்பில் இடம்பெற்றுள்ள மற்ற நாடுகளுடன் இணைந்து, ‘பிம்ஸ்டெக்’ எனப்படும் வங்கக் கடல் பல துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார கூட்டுறவுக்கான முயற்சி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பின் மாநாடு, தாய்லாந்தின் பாங்காக்கில் இன்று நடக்க உள்ளது. இதில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கிறார்.

இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியா, சீனா உட்பட பல நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதிப்பு அறிவிப்பை நேற்று முன்தினம் வெளியிட்டார். இதில், பிம்ஸ்டெக் அமைப்பில் உள்ள ஏழு நாடுகளில், ஐந்து நாடுகள் இடம்பெற்றுள்ளன.

பிம்ஸ்டெக் மாநாட்டை முன்னிட்டு, அதன் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், ஜெய்சங்கர் பேசியதாவது:

தற்போது மிகவும் நிலையில்லாத, குழப்பமான காலகட்டத்தில் இந்த உலகம் உள்ளது. இந்தச் சூழலில் இருந்து தப்பித்து, அதை எதிர்கொள்ள பிம்ஸ்டெக் நாடுகள் கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

தற்போது ஏற்பட்டுள்ள இந்த புதிய நடைமுறைகள், குறிப்பிட்ட பிராந்தியங்களையும் குறிப்பிட்ட நோக்கங்களையும் குறி வைத்துள்ளது தெரியவருகிறது. இந்த நேரத்தில் நம் எதிர்காலம் நம்மிடமே உள்ளது. வளர்ந்து வரும் நாடுகளான நாம், இந்த பலதரப்பட்ட சவால்களை, தனிப்பட்ட வகையில் அல்லாமல் ஒன்றாக இணைந்து எதிர்கொள்வதே சிறந்த வாய்ப்பாக இருக்கும்.

வர்த்தகம், முதலீடு, சேவைகள், தொடர்புகள் போன்றவற்றில், நமக்குள்ள ஒட்டுமொத்த ஆற்றல்களில் மிகவும் குறைந்த அளவே பயன்படுத்தி வருகிறோம். வங்கக் கடலில், 6,500 கி.மீ., துார கடற்கரையை இந்தியா கொண்டுள்ளதால், அனைவருடன் இணைந்து செயல்பட வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு உள்ளது என்பதை உணர்ந்துள்ளோம்.

பிம்ஸ்டெக் அமைப்பில் உள்ள ஒவ்வொரு நாட்டுடனும் தனிப்பட்ட முறையில் இந்தியா வலுவான உறவை வைத்துள்ளது. அதுபோல, நாம் அனைவரும் கூட்டாக இணைந்து செயல்பட்டால், தற்போது ஏற்பட்டுள்ள உலகளாவிய சவால்களை திறம்பட சமாளிக்க முடியும் என்பதை நம்புகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

நேற்று நடந்த வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பில், உறுப்பு நாடுகளுக்கு இடையே கடல்சார் ஒப்பந்தம் கையெழுத்தானது.

உறுப்பு நாடுகளுக்கு இடையே துறைமுக போக்குவரத்தை மேம்படுத்துதல், சுங்கம் மற்றும் குடிவரவு நடைமுறைகளை எளிதாக்குதல் மற்றும் துறைமுக உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் வாயிலாக கடல்சார் இணைப்பை இந்த ஒப்பந்தம் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கக்கடல் பகுதி ஒரு கடல்சார் களமாகும், அதனால்தான் கடல்சார் இணைப்பை மேம்படுத்துவது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மனதை நொறுங்கச் செய்த நிகழ்வு: ஜ ...

மனதை நொறுங்கச் செய்த நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல் ஆமதாபாத் விமான விபத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் ...

50 வாக்குறுதியைக் கூட நிறைவேற்ற ...

50 வாக்குறுதியைக் கூட நிறைவேற்றாத தி.மு.க.,: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க., அளித்த 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் 50ஐ ...

மகளிரை அவமதிக்கும் தி.மு.க., இனிய ...

மகளிரை அவமதிக்கும் தி.மு.க., இனியாவது திருந்தட்டும்; நயினார் நாகேந்திரன் காட்டம் ''மகளிரை அவமதிக்கும் தி.மு.க., அரசு இனியாவது திருந்தட்டும்'' என ...

அ.தி.மு.க-வுக்கு இணையான தொகுதிகள ...

அ.தி.மு.க-வுக்கு இணையான தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிட வேண்டும்: மோடிக்கு அண்ணாமலை கடிதம் 2026 தேர்தலில் அதிமுக போட்டியிடும் தொகுதி எண்ணிக்கையில் சரிபாதியில் ...

அகமதாபாத் விமான விபத்து – மீட்ப ...

அகமதாபாத் விமான விபத்து – மீட்பு நடவடிக்கையை விரைவுப்படுத்த பிரதமர் மோடி உத்தரவு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அகமதாபாத்திற்கு விரைந்து ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

மருத்துவ செய்திகள்

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...