விகே.சிங் சிபிஐ.யிடம் அதிகாரப்பூர்வ புகார்

இந்திய ராணுவத்திற்கு தரமற்ற 600 வாகனங்களை வாங்குவதற்கு அனுமதி தந்ததால் ரூ.14 கோடி லஞ்சம்தர ஓய்வுபெற்ற ஒரு ராணுவ அதிகாரி முன்வந்ததாக ராணுவ தலைமை தளபதி விகே.சிங் கடந்த மாதம் பரபரப்பு புகாரை வெளியிட்டார்.

இந்நிலையில் ராணுவ தலைமை தளபதி விகே. சிங்கிடம்,

லஞ்சம் தொடர்பாக புகார் தருமாறு சி.பி.ஐ. அதிகாரிகள்_கேட்டனர். அதை ஏற்று விகே.சிங் சிபிஐ.யிடம் அதிகாரப்பூர்வ புகார்மனு கொடுத்துள்ளார். அந்தமனுவில் அவர், ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் தேஜிந்தர் சிங் தனக்கு லஞ்சம் தர முன்வந்தார் என கூறி இருப்பதாக தெரிகிறது.

இதற்கிடையே இந்திய ராணுவத்துகு வெக்ட்ரா நிறுவனத்திடமிருந்து 1997ம் ஆண்டு முதல் வாகனங்கள் வாங்குவது தொடர்பாக சிபிஐ.தீவிர விசாரணையை மேற்கொண்டது. அப்போது வெக்ட்ரா நிறுவன தலைவர் ரவீந்தர் ரிஷி, ராணுவத்துக்கு வாகனங்களை தயாரித்து கொடுத்ததில் முறைகேடாக பணம் சம்பாதித்து இருப்பதை உறுதிபடுத்தியது.

2010-ம் ஆண்டு மதிப்பீட்டின் படி ராணுவத்துக்கு ஒரு_டிரக் ரூ.72 லட்சம் தந்து வாங்கப்பட்டது. அந்தவகையில் ஒவ்வொரு டிரக்குக்கும் ரவீந்தர்ரிஷி தலா ரூ.5 லட்சம் முறை கேடாக பெற்றுள்ளார். அவர் ராணுவ வாகன விற்பனையின் மூலம் இது வரை ரூ.250 கோடிக்கும் மேல் முறை கேடாக சம்பாதித்திருப்பதை சிபிஐ. உறுதிசெய்துள்ளது .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...