டிசம்பர் 9-ல் பிரதமர் மோடி ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களுக்கு பயணம்

பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 9 அன்று ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். ஜெய்ப்பூர் செல்லும் அவர், காலை 10:30 மணியளவில், ஜெய்ப்பூர் கண்காட்சி – மாநாட்டு மையத்தில் (ஜேஇசிசி) ரைசிங் ராஜஸ்தான் உலக முதலீட்டாளர் உச்சிமாநாடு 2024-ஐ தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு, பானிபட் செல்லும் பிரதமர், பிற்பகல் 2 மணியளவில் எல்ஐசி-யின் பீமா சகி யோஜனா திட்டத்தைத்தொடங்கி வைக்கிறார். மஹாராணா பிரதாப் தோட்டக்கலை பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

ராஜஸ்தானில் பிரதமர்

ரைசிங் ராஜஸ்தான் உலக முதலீட்டாளர் உச்சி மாநாடு 2024, ராஜஸ்தான் உலக வர்த்தகக்கண்காட்சி ஆகியவற்றைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார். ஜெய்ப்பூர் கண்காட்சி – மாநாட்டு மையத்தில் நடைபெறுப் இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றவுள்ளார்.

டிசம்பர் 9 முதல் 11 வரை நடைபெறவுள்ள முதலீட்டாளர் உச்சி மாநாட்டின் கருப்பொருள் ‘நிறைவு, பொறுப்பு, தயார் நிலை’ என்பதாகும். நீர் பாதுகாப்பு, நீடித்த சுரங்க நடைமுறைகள், நீடித்த நிதி மேலாண்மை, அனைவரையும் உள்ளடக்கிய சுற்றுலா, வேளாண் வணிக கண்டுபிடிப்புகள், பெண்கள் தலைமையிலான புத்தொழில்கள் உள்ளிட்ட கருப்பொருள்கள் குறித்து 12 துறை சார்ந்த அமர்வுகள் இந்த உச்சிமாநாட்டில் இடம்பெறும். ‘நகரங்களுக்கான நீர் மேலாண்மை’, ‘தொழில்களின் பன்முகத்தன்மை- உற்பத்தியும் அதற்கு அப்பாலும்’  ‘வர்த்தகமும் சுற்றுலாவும்’ போன்ற கருப்பொருள்களில் எட்டு அமர்வுகளும் இந்த உச்சிமாநாட்டின் போது நடைபெறும்.

வெளிநாடு வாழ் ராஜஸ்தானி மாநாடு, குறு,சிறு, நடுத்தர தொழில் மாநாடு  ஆகியவையும் இந்த மூன்று நாட்களில் நடைபெறும். ராஜஸ்தான் உலக வர்த்தக கண்காட்சியில் ராஜஸ்தான் அரங்கம், தேசிய அரங்கம், புத்தொழில் அரங்கம் போன்ற கருப்பொருள் அரங்குகள் இடம்பெறும். இந்த மாநாட்டில் 16 கூட்டு செயல்பாட்டு நாடுகள் உட்பட 32 நாடுகள், 20 சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

ஹரியானாவில் பிரதமர்

பெண்களுக்கு அதிகாரமளித்தல், நிதி உள்ளடக்கம் ஆகியவை குறித்த தமது உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, பானிபட்டில் ‘பீமா சகி யோஜனா’ திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) இந்த முயற்சி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 70 வயதுடைய பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிதியியல் அறிவு, காப்புறுதி விழிப்புணர்வு ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக அவர்களுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு சிறப்பு பயிற்சியும் உதவித்தொகையும் வழங்கப்படும். பயிற்சிக்குப் பிறகு, அவர்கள் எல்ஐசி முகவர்களாக பணியாற்ற முடியும். மேலும் பட்டதாரி பீமா சகி-கள் எல்ஐசி-யில் மேம்பாட்டு அதிகாரி பணிகளுக்குப் பரிசீலிக்க தகுதி பெறுவார்கள். வருங்கால பீமா சகிகளுக்கு நியமன சான்றிதழ்களையும் பிரதமர் வழங்குவார்.

இந்த நிகழ்ச்சியின்போது, கர்னாலில் உள்ள மஹாராணா பிரதாப் தோட்டக்கலை பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். 495 ஏக்கர் பரப்பளவில் பிரதான வளாகமும் ஆறு மண்டல ஆராய்ச்சி நிலையங்களிம் ரூ .700 கோடிக்கும் அதிகமான செலவில் நிறுவப்படும். இப்பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கு ஒரு தோட்டக்கலைக் கல்லூரியும், 10 தோட்டக்கலைத் துறைகளை உள்ளடக்கிய ஐந்து பள்ளிகளும் இருக்கும். இது பயிர் மாற்றுத்தன்மை, தோட்டக்கலை தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சியை நோக்கி செயல்படும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி க ...

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள் – அண்ணாமலை கேள்வி அரசுப் பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அ ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய தஸ்ய கல்வி கொள்கை – மத்திய கல்வி  அமைச்சர் 'புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அனைத்து ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவோம் – பிரதமர் மோடி அறிவுரை டில்லியில் இன்று (பிப்.,17) அதிகாலை நில அதிர்வு உணரப்பட்ட ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ 9 லட்சம் கோடி ஏலக்காய் எட்டும் – பிரதமர் மோடி உறுதி 'ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ.9 ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் R ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் – ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் 'யாரையும் புண்படுத்தும் விஷயங்களை நாங்கள் செய்ய மாட்டோம்' என ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப்பது மகிழ்ச்சி – பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் நடப்பது ...

மருத்துவ செய்திகள்

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...