6 மாதத்திற்குள் ஆதவ் அர்ஜூனா மனம் மாறுவாரா அல்லது திருமாவளவன் அணி மாறுவாரா? என பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜூனா, சமீப நாட்களாக, தி.மு.க.,வுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். தி.மு.க.,வும் வி.சி.,யும் ஒரே கூட்டணில் நீடிக்கும் நிலையில், இவருடைய தன்னிச்சையான செயல்பாடுகளால், தி.மு.க.,வுடனான உறவில் சிக்கல் ஏற்பட்டது.
தி.மு.க., தலைமையை கடுமையாக விமர்சித்து வரும் ஆதவ் அர்ஜூனாவை, கட்சியில் இருந்து ஆறு மாத காலத்திற்கு தற்காலிக நீக்கம் செய்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உத்தரவிட்டார். இது குறித்து இன்று(டிச.,10) சமூகவலைதளத்தில் தமிழிசை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
ஆதவ் அர்ஜுனாவை ஆறு மாதத்திற்கு இடை நீக்கம் என திருமாவளவன் அறிவித்துள்ளது. 6 மாதத்திற்குள் ஆதவ் அர்ஜூனா மனம் மாறுவாரா அல்லது திருமாவளவன் அணி மாறுவாரா? என தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார்.
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |