தமிழர்கள் மீது மோடியின் அளவற்ற அன்பு – கிஷன் ரெட்டி

பிரதமர் மோடி தமிழர்கள் மீது அளவற்ற அன்பு வைத்துள்ளார் என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

மதுரை மேலுார் பகுதி டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்காக அப்பகுதி மக்கள் நடத்திய பாராட்டு விழாவில் பங்கேற்ற கிஷன் ரெட்டி பேசியதாவது:

பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் ஏராளமான அன்பை தெரிவித்துள்ளனர். தமிழர்களின் பெருமை, பாரம்பரியம், பண்பாட்டை உலகம் முழுவதும் மோடி கொண்டு செல்கிறார். தமிழர்கள் மீது தனிப்பட்ட முறையில் பற்றுக் கொண்டு செங்கோலை பார்லிமென்ட்டில் நிறுவி பெருமை சேர்த்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு பிரச்னை வந்து போது அதை மீட்டு தந்தவர் பிரதமர் மோடி. தமிழ் பண்பாட்டை காப்பதற்காக அனைத்து பணிகளையும் செய்து வருகிறார் மோடி. தமிழ்ச் சங்கமம், சவுராஷ்டிர தமிழ் சங்கமம் நடத்தி காட்டியவர். இது குஜராத்திற்கும் தமிழகத்திற்கும் பண்பாட்டு சின்னமாக திகழ்ந்தது. தமிழக மீனவர்கள் இலங்கையில் சிக்கலுக்கு ஆளாகும்போது அவர்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் தந்தவர் மோடி.

தமிழக மக்கள் தேசியத்தையும் மோடியையும் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...