‘பாரம்பரிய போர் முறைகளுக்கு பதிலாக, சைபர், விண்வெளி மற்றும் பொருளாதாரம் மற்றும் தகவல்கள் வாயிலாக தற்கால போர் நடக்கிறது. இப்படி புதிய களத்தில் நடக்கும் போர் பாரம்பரிய போர் முறைகளை விஞ்சிவிட்டது’ என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில், பாரம்பரிய போர் முறை மற்றும் தற்காலிக போர் முறை குறித்து, ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:
சர்வதேச புவி அரசியல் சூழல்களில் ஏற்படும் மாற்றங்களால் எதிர்காலத்தில் ஏற்பட உள்ள சிக்கல்கள் குறித்து ராணுவ அதிகாரிகள் சிந்திக்க வேண்டும். சர்வதேச உறவுகளில் எடுக்கப்படும் முடிவுகளை அதிகாரிகள் கூர்ந்து கவனிக்க வேண்டும். போர்க்களத்தை தாண்டி அதன் தாக்கம் தூதரக, பொருளாதார உறவுகளில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.
ஏ.ஐ., மற்றும் ட்ரோன் உள்ளிட்ட தொழில்நுட்ப ரீதியான நவீனகால போர் முறைகளை எதிர்கொள்ள ராணுவ அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும். பாரம்பரிய போர் முறைகளுக்கு பதிலாக, சைபர், விண்வெளி மற்றும் பொருளாதாரம் மற்றும் தகவல்கள் வாயிலாக தற்கால போர் நடக்கிறது. இத்தகைய போர், பாரம்பரிய போர் முறைகளை விஞ்சிவிட்டது.
இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வழிகளை அதிகாரிகள் கண்டறிந்து செயல்பட வேண்டும். இது தொடர்புடைய படிப்புகளை தேசிய பாதுகாப்பு கல்லூரி தங்கள் பாடத்திட்டத்தில் இணைத்து பயற்சி அளிப்பது அவசியமாகும். இந்த பயிற்சி பிராந்திய பாதுகாப்பு மற்றும் வளமையை மேம்படுத்த உதவும். இவ்வாறு அவர் பேசினார்.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |