நவீன கால போர்களுக்கு தயாராக இருக்க வேண்டும் -ராஜ் நாத் சிங்

 ‘பாரம்பரிய போர் முறைகளுக்கு பதிலாக, சைபர், விண்வெளி மற்றும் பொருளாதாரம் மற்றும் தகவல்கள் வாயிலாக தற்கால போர் நடக்கிறது. இப்படி புதிய களத்தில் நடக்கும் போர் பாரம்பரிய போர் முறைகளை விஞ்சிவிட்டது’ என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில், பாரம்பரிய போர் முறை மற்றும் தற்காலிக போர் முறை குறித்து, ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:

சர்வதேச புவி அரசியல் சூழல்களில் ஏற்படும் மாற்றங்களால் எதிர்காலத்தில் ஏற்பட உள்ள சிக்கல்கள் குறித்து ராணுவ அதிகாரிகள் சிந்திக்க வேண்டும். சர்வதேச உறவுகளில் எடுக்கப்படும் முடிவுகளை அதிகாரிகள் கூர்ந்து கவனிக்க வேண்டும். போர்க்களத்தை தாண்டி அதன் தாக்கம் தூதரக, பொருளாதார உறவுகளில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.

ஏ.ஐ., மற்றும் ட்ரோன் உள்ளிட்ட தொழில்நுட்ப ரீதியான நவீனகால போர் முறைகளை எதிர்கொள்ள ராணுவ அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும். பாரம்பரிய போர் முறைகளுக்கு பதிலாக, சைபர், விண்வெளி மற்றும் பொருளாதாரம் மற்றும் தகவல்கள் வாயிலாக தற்கால போர் நடக்கிறது. இத்தகைய போர், பாரம்பரிய போர் முறைகளை விஞ்சிவிட்டது.

இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வழிகளை அதிகாரிகள் கண்டறிந்து செயல்பட வேண்டும். இது தொடர்புடைய படிப்புகளை தேசிய பாதுகாப்பு கல்லூரி தங்கள் பாடத்திட்டத்தில் இணைத்து பயற்சி அளிப்பது அவசியமாகும். இந்த பயிற்சி பிராந்திய பாதுகாப்பு மற்றும் வளமையை மேம்படுத்த உதவும். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...