”ஒடிசாவில், என்.ஆர்.ஐ., எனப்படும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் திருவிழா நடக்க உள்ளது. இது, மாநிலத்தின் கலாசார, பாரம்பரிய பெருமைகளை உலகெங்கும் பரப்பும்,” என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
ஒடிசாவில் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் வெளிநாடுவாழ் இந்தியர் திருவிழா, இந்த முறை ஒடிசாவின் புவனேஸ்வரில் நடக்க உள்ளது. இந்த மூன்று நாள் திருவிழா இன்று துவங்குகிறது.
இதில் பங்கேற்க உள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், புரியில் உள்ள ஜெகன்னாதர் கோவில், கொனார்க்கில் உள்ள சூரியக் கோவில் ஆகியவற்றில் நேற்று தரிசனம் செய்தார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்த திருவிழாவில் பங்கேற்க வருகை தரும் வெளிநாடுவாழ் இந்தியர்கள், புரி மற்றும் கொனார்க் கோவில்களை நிச்சயம் பார்க்க வேண்டும். இந்த திருவிழா, நம் நாட்டின் கலாசார, பாரம்பரிய பெருமைகளை உலகெங்கும் பரப்புவதற்கான ஒரு வாய்ப்பாக ஒடிசாவுக்கு அமைந்துள்ளது’ என, ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |