இண்டர்போல் உதவியை நாட பாரத்போல் தளம் துவக்கி வைப்பு

‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பின் உதவியை உடனடியாக பெறும் வகையில், ‘பாரத்போல்’ எனப்படும் புதிய ஆன்லைன் தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பில், 195 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் சர்வதேச குற்றவாளிகளையும் மற்றும் சொந்த நாட்டை விட்டு தப்பிச் செல்லும் குற்றவாளிகளைப் பிடிப்பதற்கும், இந்த அமைப்பு உதவுகிறது. இது தவிர, சர்வதேச அளவில் நடக்கும் குற்றங்கள், முக்கிய குற்றவாளிகள் உள்ளிட்ட விபரங்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

இந்த அமைப்புடன் தொடர்பு கொள்ளும் நேரடி முகமையாக தற்போது, நம் நாட்டின் சார்பில் சி.பி.ஐ., செயல்படுகிறது. இதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன; கால விரயமும் ஏற்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில், சி.பி.ஐ., சார்பில், பாரத்போல் என்ற புதிய ஆன்லைன் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், மாநில போலீஸ் மற்றும் பிற விசாரணை அமைப்புகளும், தங்களுடைய கோரிக்கைகளை நேரடியாக இன்டர்போல் அமைப்பிடம் வைக்க முடியும்.

வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற குற்றவாளிகளை பிடிப்பதற்கு உதவி கேட்பதுடன், நம் நாட்டில் பதுங்கியிருக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்த குற்றவாளிகள் குறித்தும் மாநில போலீஸ் மற்றும் பிற விசாரணை அமைப்புகள் தெரிந்து கொள்ள முடியும். இதைத் தவிர, சர்வதேச அளவில் நடக்கும் குற்றங்கள், குற்றவாளிகள் தொடர்பான தகவல்கள் கிடைப்பதால், உள்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், மாநில போலீஸ் உள்ளிட்ட அமைப்புகளுக்கு உதவும்.

இந்த புதிய இணையதளத்தை, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டில்லியில் நேற்று துவக்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில், சிறப்பான சேவையாற்றிய, 35 சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு, ஜனாதிபதி போலீஸ் விருதுகளை அமித் ஷா வழங்கினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாம் விழித்தால் கலப்படத்தை முழ ...

நாம் விழித்தால் கலப்படத்தை முழுமையாக நீக்கலாம் – அண்ணாமலை ''கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாம் கேள்வி எழுப்ப ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோ ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயல ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயலர் மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி, வரும் ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா அதிபர் இந்தியா வந்தார் டில்லியில் நடக்கும் நாட்டின் 76வது குடியரசு தின விழாவில் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டோம் – அமித் ஷா ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் க ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை அருகே அமைய ...

மருத்துவ செய்திகள்

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...