புததம் தான் எதிர்காலம் யுத்தம் அல்ல- பிரதமர் மோடி

“இந்தியா சொல்வதை கேட்க உலகமே தயாராக இருக்கிறது. நம் நாட்டின் பாரம்பரியம் காரணமாக, ‘யுத்தம் எதிர்காலம் அல்ல; புத்தம் தான் எதிர்காலம்’ என்பதை சர்வதேச சமூகத்திடம் நம்மால் வலியுறுத்த முடிகிறது,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

என்.ஆர்.ஐ., எனப்படும், வெளிநாடுவாழ் புலம்பெயர்ந்த இந்தியர்களின் பங்களிப்பை போற்றும் விதமாக, ‘பிரவாசி பாரதிய திவஸ் மாநாடு’ ஆண்டுதோறும் நடக்கிறது. இதன், 18வது மாநாடு ஒடிசாவின் புவனேஸ்வரில் நேற்று முன்தினம் துவங்கி இன்று வரை நடக்கிறது.

இந்த மூன்று நாள் மாநாட்டில், 50 நாடுகளில் இருந்து வெளிநாடுவாழ் இந்தியர்கள் பங்கேற்று உள்ளனர். நேற்று நடந்த இரண்டாம் நாள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

புலம்பெயர்ந்தோரை, அவர்கள் வாழும் நாடுகளுக்கான இந்தியாவின் துாதர்களாகவே எப்போதும் கருதுகிறேன். நமக்கு பன்முகத்தன்மையை கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. காரணம், நம் வாழ்க்கையே பன்முகத்தன்மையில் தான் இயங்குகிறது. அதனால்தான், இந்தி யர்கள் எங்கு சென்றாலும், அந்த குறிப்பிட்ட நாட்டின், சமூகத்தின் ஒரு பகுதியாக மாறிவிடுகின்றனர். அந்த நாட்டின் விதிகள் மற்றும் மரபுகளை நாம் மதிக்கிறோம்.

அந்த நாட்டிற்கும், அதன் சமூகத்திற்கும் நேர்மையாக சேவை செய்கிறோம். வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு பங்களிக்கிறோம். அதே நேரத்தில் நம் இதயம், இந்தியாவை நினைத்தே துடித்துக் கொண்டிருக்கும்.

புலம்பெயர்ந்த இந்தி யர்களால், நான் எந்த நாட்டிற்கு சென்றாலும் தலை நிமிர்ந்து செல்கிறேன். உலகம் முழுதும், உங்களிடம் இருந்து நான் பெற்ற அன்பு, பாசம், கவுரவத்தை நான் மறக்கவில்லை.

கடந்த 10 ஆண்டுகளில், உலகம் முழுதும் பல்வேறு தலைவர்களை நான் சந்தித்துள்ளேன். அங்கு வசிக்கும் இந்தியர்களை உலகத் தலைவர்கள் பாராட்டுகின்றனர். அவர்களின் சமூகத்திற்கு நீங்கள் சேர்க்கும் சமூக மதிப்பீடுகளே இதற்குக் காரணம்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்க ...

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்களை வரவேற்போம்!! தமிழக மக்களிடம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஆதரவு பல்கி ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தம ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தமிழக அரசு: நயினார் நகேந்திரன் குற்றச்சாட்டு மாம்பழ விவசாயிகள் வயிற்றில் அடிக்காமல், கொள்முதல் விலையை உயர்த்த ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்கா ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்காட்சிக்கு அறுபடை வீடுகளில் இருந்து வந்த வேல் மதுரை, வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன், 22ல் ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவ ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவை மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்? என தமிழக ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள் ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள்விக்குறியானது ஏன்? – நயினார் நாகேந்திரன் கோவை சின்னியம்பாளையத்தில் பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகளை, மர்ம ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசா ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசாணை: முதல்வருக்கு நயினார் நகேந்திரன் வலியுறுத்தல் 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த காவலர்களுக்கு, சிறப்பு ...

மருத்துவ செய்திகள்

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...