இந்தியா திறமையான இளைஞர்களை கொண்ட நாடு- பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியா திறமையான இளைஞர்களை கொண்ட நாடு. 2047ம் ஆண்டுக்குள் நாட்டை வளர்ச்சியடையச் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ என பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் ‘பிரவாசி பாரதிய திவாஸ்’ மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: உங்களால் என் தலை நிமிர்ந்து நிற்கும் வாய்ப்பு கிடைக்கிறது. நான் சந்தித்த உலகத் தலைவர்கள் அந்நாட்டின் புலம் பெயர்ந்த இந்தியர்களை பாராட்டுகின்றனர். இந்தியர்கள் எங்கு சென்றாலும் அங்குள்ள சமூகத்துடன் ஒத்துப்போகிறார்கள். எதிர்காலம் போரில் இல்லை என்பதை இந்தியா உலகிற்கு எடுத்து சொல்கிறது.

நாம் அந்த நாட்டிற்கும், சமூகத்திற்கும் முழுமையான நேர்மையுடன் சேவை செய்கிறோம். இந்தியாவில் ஒவ்வொரு துறையும் வானத்தின் உயரங்களை தொட முன்னேறி வருகிறது. உலகம் இந்தியா தனது கருத்தை வலுவாக முன் வைக்கிறது. 1947ம் ஆண்டு இந்தியாவின் சுதந்திரத்தில் புலம்பெயர்ந்தோர் முக்கிய பங்கு வகித்தனர். நம் வாழ்வில் ஜனநாயகம் வேரூன்றியிருக்கிறது. தற்போது 2047ம் ஆண்டுக்குள் நாட்டை வளர்ச்சியடையச் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஜி20 கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்தியா திறமையான இளைஞர்களை கொண்ட நாடு ஆகும். இந்திய இளைஞர்கள் வெளிநாடு செல்லும் போதெல்லாம், அவர்கள் திறமைகளுடன் செல்வதை உறுதி செய்ய அரசு முயற்சிக்கிறது. இன்னும் சில நாட்களில் பிரயாக்ராஜில் மகா கும்ப மேளா துவங்கும். எங்கும் மகிழ்ச்சியான சூழல் நிலவுகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாம் விழித்தால் கலப்படத்தை முழ ...

நாம் விழித்தால் கலப்படத்தை முழுமையாக நீக்கலாம் – அண்ணாமலை ''கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாம் கேள்வி எழுப்ப ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோ ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயல ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயலர் மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி, வரும் ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா அதிபர் இந்தியா வந்தார் டில்லியில் நடக்கும் நாட்டின் 76வது குடியரசு தின விழாவில் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டோம் – அமித் ஷா ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் க ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை அருகே அமைய ...

மருத்துவ செய்திகள்

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...