இந்தியாவை வலிமையாக்க இந்த 4 தூண்களை வலிமையாக்க வேண்டும் – பிரதமர் மோடி

‘வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கு நான்கு தூண்களை வலிமையாக்க நான் உத்தரவாதம் அளித்துள்ளேன். விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகள் தான் இந்த 4 தூண்கள்’ என பிரதமர் மோடி பேசினார்.

டில்லியில் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த 11 ஆண்டுகளில் ஆம் ஆத்மி அரசு நகரத்தை சீரழித்துவிட்டது. இந்த முறை டில்லியில் பா.ஜ., ஆட்சி அமைய போகிறது. பா.ஜ.,வின் கியாரண்டிகளுக்கும், ஆம் ஆத்மியின் பொய்யான வாக்குறுதிகளுக்கும் இடையே தேர்தல் போர் நடக்கிறது.

வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கு நான்கு தூண்களை வலிமையாக்க நான் உத்தரவாதம் அளித்துள்ளேன். விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகள் தான் இந்த 4 தூண்கள்.

இந்தியாவின் வளர்ச்சியில் நமது நடுத்தர வர்க்கத்தினரின் பங்கு மகத்தானது. நடுத்தர வர்க்கத்தினரை மதித்து நேர்மையாக வரி செலுத்துவோருக்கு வெகுமதி அளிப்பது பா.ஜ., மட்டுமே. நேற்றைய பட்ஜெட்டுக்கு பிறகு நாடு முழுவதும் நடுத்தர வர்க்கத்தினருக்கான நட்பு ரீதியான பட்ஜெட் என பேசப்பட்டு வருகிறது.

ரு காலத்தில் நீங்கள் ரூ.12 லட்சம் சம்பாதித்திருந்தால், நான்கில் ஒரு பங்கை அரசுக்கு வரியாக செலுத்த வேண்டி இருக்கும். அதாவது, காங்கிரஸ் ஆட்சியில் ரூ.12 லட்சம் சம்பாதித்தால் ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் வரி கட்ட வேண்டியிருக்கும். பா.ஜ., அரசின் நேற்றைய பட்ஜெட்டுக்கு பிறகு, ஒரு வருடத்தில் ரூ.12 லட்சம் சம்பாதிக்கும் ஒருவர் ஒரு ரூபாய் கூட வரி கட்ட வேண்டியதில்லை. இந்திய வரலாற்றிலேயே நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்ற பட்ஜெட் இதுதான்.

இந்தியாவின் வளர்ச்சியில் நமது நடுத்தர வர்க்கத்தினரின் பங்களிப்பு அதிகம். 10 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 10 வது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. நாட்டின் பொருளாதார சக்தி அதிகரித்து வருகிறது, பொருளாதாரத்தின் உயரம் அதிகரித்து வருகிறது.

குடிமக்களின் வருமானமும் அதிகரித்து வருகிறது. டில்லி மக்கள் அனைவரும் சேவை செய்ய எங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். ஒவ்வொரு பிரச்னைக்கும் முடிவு கட்ட நான் அர்ப்பணிப்புடன் இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.