நகர்ப்புற நக்சல் மொழியில் பேசுவதா? பிரதமர் மோடி ராகுல் மீது கண்டனம்

”சிலர், ‘நகர்ப்புற நக்சல்’ பயன்படுத்தும் மொழியில் வெளிப்படையாகவே பேசுகின்றனர். தேசத்துக்கு எதிராக போர் தொடுப்போம் என்று கூறுபவர்களால், நம் அரசியலமைப்பையோ, நாட்டின் ஒற்றுமையையோ புரிந்துகொள்ள முடியாது,” என, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை, பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்தார்.

பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளில், ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் பார்லி.,யில் நடந்து வருகிறது. இதில், நேற்று முன்தினம் பேசிய லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், மத்திய அரசின் திட்டங்களை கடுமையாக தாக்கிப் பேசினார்.

இதற்கு, லோக்சபாவில் நேற்றைய உரையின் போது பிரதமர் மோடி பதிலடி தந்தார். ஆனால் பேச்சின் எந்த இடத்திலும் ராகுலின் பெயரை அவர் நேரடியாக குறிப்பிடவில்லை.

பிரதமர் பேசியதாவது:

ஜாதி, மதம், இட ஒதுக்கீடு மற்றும் ஜாதி கணக்கெடுப்பு பற்றி பேசுவதை, சிலர் வழக்கமாக வைத்துள்ளனர். பா.ஜ., ஆட்சி காலத்தில், மருத்துவ படிப்பில் எஸ்.சி., வகுப்பினருக்கான ஒதுக்கீடு எண்ணிக்கை, 7,700லிருந்து, 17,000 ஆக அதிகரிக்கப்பட்டது.

ஏழைகளின் குடிசைகளுக்கு சென்று புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதை பொழுதுபோக்காக வைத்திருப்பவர்களுக்கு, பார்லிமென்டில் ஏழைகள் குறித்த பேச்சு, ‘போர்’ அடிக்கவே செய்யும்.

சட்டைப் பையில் அரசியலமைப்பு சட்டப் புத்தகத்துடன் சுற்றுபவர்களின் ஆட்சி காலத்தில், முஸ்லிம் பெண்கள் என்னென்ன கஷ்டங்களை அனுபவித்தனர் என்பது தெரியுமா?

‘அர்பன் நக்சல்’ என்றழைக்கப்படும், நகர்ப்புற நக்சல்கள் பேசும் பேச்சுக்களை சிலர் இன்று வெளிப்படையாகவே பயன்படுத்துகின்றனர். தேசத்துக்கு எதிராக போர் தொடுப்போம் என்கின்றனர். இவர்களால் அரசியலமைப்பையும், தேசத்தின் ஒற்றுமையையும் எப்படி புரிந்துகொள்ள முடியும்?

பழங்குடியினருக்கான ஒதுக்கீடு, 3,800லிருந்து, 9,000 ஆக அதிகரிக்கப்பட்டது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஒதுக்கீடு, 14,000லிருந்து, 32,000 ஆக உயர்த்தப்பட்டது.

அரசின் வெளியுறவு கொள்கையை பற்றி சிலர் பேசியுள்ளனர். அதில் ஆர்வமுள்ளவர்கள் ‘ஜே.எப்.கே.,ஸ் பார்காட்டன் கிரைசிஸ்’ என்ற புத்தகத்தை வாசிக்கவும். இந்த புத்தகம் வெளியுறவு கொள்கையில் நிபுணரான ஒருவரால் எழுதப்பட்டது.

அதில் வெளியுறவுத் துறையை கவனித்த நாட்டின் முதல் பிரதமர் பற்றிய குறிப்பு உள்ளது.

நாடு நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொண்ட போது அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் எப் கென்னடி உடன் நடந்த உரையாடல், வெளியுறவுக் கொள்கை என்ற பெயரில் என்ன மாதிரி ஆட்டம் ஆடினர் என்பது அதில் விவரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...