டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் இணைந்து செயல்பட ஒப்பந்தம்

இந்தியா – தாய்லாந்து இடையேயான உறவை, பல்துறை உறவாக உயர்த்த, பிரதமர் நரேந்திர மோடி – தாய்லாந்து பிரதமர் பெடோங்ட்ரான் ஷினவாத்ரே இடையே நடந்த பேச்சில் முடிவு செய்யப்பட்டது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இணைந்து செயல்படுவது உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில், ‘பிம்ஸ்டெக்’ எனப்படும் வங்கக் கடல் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு முயற்சி அமைப்பின் ஆறாவது மாநாடு, இன்று நடக்க உள்ளது. இதில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் நேற்று சென்றார்.

மோடியை வரவேற்ற அந்நாட்டின் பிரதமர் பெடோங்ட்ரான் ஷினவாத்ரேவுடன், இருதரப்பு உறவுகள் உள்ளிட்டவை தொடர்பாக, பிரதமர் மோடி பேசினார்.

இந்த பேச்சின்போது, சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இரு நாட்டுக்கும் இடையேயான துாதரக உறவை, பல்துறை ஒத்துழைப்பு உறவாக உயர்த்துவது தொடர்பாக முடிவு செய்யப்பட்டது. இது குறித்த கூட்டு பிரகடனம் வெளியிடப்பட்டது.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இணைந்து செயல்படுவது, குஜராத்தின் லோதாலில் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகம் கட்டுவது, எம்.எஸ்.எம்.இ., எனப்படும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறையில் இணைந்து செயல்படுவது உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தாய்லாந்துடன், கல்வி, கலாசாரத்தில் இணைந்து செயல்படும் ஒப்பந்தமும் கையெழுத்தானது. இரு தலைவர்கள் இடையே நடந்த சந்திப்பு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தோ – பசிபிக் பிராந்தியத்தை சுதந்திரமாக, அனைவருக்குமான சட்டங்களுக்கு உட்பட்டு பயன்படுத்துவதில் எப்போதும் ஆதரவாக இருக்க இரு தலைவர்களும் உறுதி அளித்துள்ளனர்.

வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தாய்லாந்துக்கு இடையே சுற்றுலா, கலாசாரம் மற்றும் கல்வியில் இணைந்து செயல்படவும் முடிவு செய்யப்பட்டது. அதுபோல, இரு நாடுகளுக்கும் இடையே, வர்த்தகம், முதலீடு மற்றும் வணிகத்தில் பரஸ்பர வளர்ச்சியை உறுதி செய்வது தொடர்பாகவும் பேசப்பட்டது.

இந்தியா மற்றும் தாய்லாந்துக்கு இடையே உள்ள பாரம்பரிய, கலாசார உறவுகளை பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

புத்த மதத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான தொடர்புகளையும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, ராமாயணம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பிணைப்புகளை அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிம்ஸ்டெக் மாநாட்டின்போது, நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, வங்கதேச இடைக்கால நிர்வாகத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், மியான்மர் ராணுவ நிர்வாகத்தின் தலைவர் மின் ஆங்க் ஹிலாங்க் உள்ளிட்டோரையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.

மியான்மரில் அரசை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றியதற்காக, ‘ஆசியான்’ எனப்படும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தின் கூட்டங்களில் பங்கேற்க மின் ஆங்க் ஹிலாங்கிற்கு தடை விதிக்கப்பட்டது.

ஆதரவு நாடுகளான சீனா, ரஷ்யா தவிர்த்து, கடைசியாக, 2021ல் இந்தோனேஷியாவுக்கு மின் ஆங்க் ஹிலாங்க் சென்றார். அதன் பின், தற்போது தாய்லாந்துக்கு அவர் சென்றுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ ...

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ.7,200 கோடி திட்டங்கள். பிரதமர் நரேந்திர மோடி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி ஒரு 10 பவுன் நகைக்காக தனிப்படை அமைத்து எவ்வித ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்;பிரதமர் மோடி குற்றச்சாட்டு பீஹாரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்ப ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி; இந்திய ராணுவம் பெருமிதம் லடாக்கில் சுமார் 15,000 அடி உயரத்தில் ஆகாஷ் வான் ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உ ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவும் ரூ.24 ஆயிரம் கோடி தன் தானிய ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...