பாம்பன் பாலத்தை குறைத்து மதிப்பிடவேண்டாம் – அமைச்சருக்கு வானதி சீனிவாசன் அறிவுரை

”இந்திய பொறியாளர்களால் கட்டப்பட்ட பாம்பன் ரயில் பாலத்தை, குறைத்து மதிப்பிடக்கூடாது,” என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம், பா.ஜ., — எம்.எல்.ஏ., வானதி தெரிவித்தார்.

பா.ஜ., வானதி: டி.சி.எஸ்., நிறுவனத்தின், சமூக பொறுப்பு நிதியில், அரசு ஐ.டி.ஐ.,க்கள் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டன. அதை இப்போதும் தொடர வேண்டும். படித்த இளைஞர்கள் வேலை வேண்டும் என்கின்றனர்; நிறுவனங்கள் வேலைக்கு ஆட்கள் தேவை என்கின்றனர்.

வேலை தேடும் இளைஞர்களுக்கு திறன் இருப்பதில்லை. படித்த இளைஞர்களின் திறனை அதிகரிக்க வேண்டும்.

அமைச்சர் கணேசன்: படித்த இளைஞர்களுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதற்காகவே, ‘நான் முதல்வன்’ திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு, 42 அரசு ஐ.டி.ஐ.,க்கள் துவக்கப்பட்டுள்ளன. டாடா நிறுவனத்துடன் இணைந்து, ஐ,டி.ஐ.,க்கள் நவீனப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் 239 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி, 2.49 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் அப்பாவு: படித்த இளைஞர்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் இடையிலான இணைப்பு பாலம் தான், நான் முதல்வன் திட்டம்.

வானதி: அந்த பாலத்தை வலுவாக அமைக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

அமைச்சர் சிவசங்கர்: சமீபத்தில் பாம்பனில் கட்டப்பட்ட பாலம் போல் இல்லாமல், திராவிட மாடல் பாலம் சிறப்பாக, உறுதியாக இருக்கும்.

வானதி: பாம்பன் ரயில் பாலம் என்பது, இந்தியாவில் கடலில் கட்டப்பட்டுள்ள முதல் செங்குத்து துாக்கு பாலம். இந்திய தொழில்நுட்பத்தில், இந்திய பொறியாளர்களின் உழைப்பில் கட்டப்பட்டது. உங்கள் சித்தாந்தத்திற்காக, நமது பொறியாளர்கள், தொழிலாளர்களின் உழைப்பை குறைத்து மதிப்பிடக்கூடாது; பெருமைப்பட வேண்டும்.

அமைச்சர் சிவசங்கர்: தமிழகம் முன்னேறிய மாநிலம் என்று பேசினீர்கள். ஆனால், தமிழகம் பின்தங்கியிருப்பது போலவும், தமிழகத்தை காக்க வந்த காவல் தெய்வங்கள் போல், உங்கள் நண்பர்கள் வெளியே பேசுகின்றனர். நீங்களும் தமிழகத்தை குறைத்துப் பேச வேண்டாம். நாங்களும் உங்களை குறைத்து பேசவில்லை.

வானதி: சட்டசபைக்கு உள்ளே எம்.எல்.ஏ.,க்கள் பேசுவதைவிட, எங்கள் கட்சிக்காரர்கள் வெளியே பேசுவதற்கு, அமைச்சர் இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் எங்கும் தமிழகத்தை குறைத்து மதிப்பிடவில்லை; பெருமைப்படுகிறோம்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இன்று மாலை 5 மணி முதல் போர் நிறு ...

இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம்; மே 12ல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை! இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தத்தை ...

ராணுவத்திற்கு உதவ தயார்

ராணுவத்திற்கு உதவ தயார் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்திய ராணுவ ...

போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; � ...

போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; ஜெய்சங்கரிடம் அமெரிக்கா அமைச்சர் பேச்சு 'இந்தியா பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்த உதவி செய்ய ...

போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோ� ...

போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் ஆலோசனை போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், டில்லியில் பிரதமர் ...

பாகிஸ்தானின் சதித்திட்டங்களை � ...

பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்; இந்திய ராணுவம் உறுதி ''பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்'' என இந்திய ராணுவம் ...

ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வ� ...

ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் – ராஜ்நாத் சிங் 'இந்திய ராணுவம் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ...

மருத்துவ செய்திகள்

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...