சனாதனம் என்றால் என்ன என்ற ஒரு முடிவுக்கு வாங்க

உதயநிதி என்ற பெயரே சமஸ்கிருத பெயர்தான் உதயநிதிக்கு நான் சுட்டிக் காட்டுவது என்னவென்றால் உங்களுடைய பிளஸ் 2 பாட புத்தகத்தில் சனாதனம், இந்துதர்மம் என்றால் என நீங்களே விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.

அதைத்தான் குழந்தைகள் படிக்கிறார்கள். உதய நிதி பிளஸ் 2 பாஸ் செய்திருக்கிறார் என நினைக்கிறேன். இல்ல படித்திருக் கிறாரா இல்லையா என எனக்கு தெரியாது. சினிமாவில் பிரபலமடைந்தார். ஸ்டாலின் மகன் என்பதால் பிரபல மடைந்தார். அனேமாக அவர் பிளஸ் 2 பாஸ்செய்திருப்பார். லயோலா கல்லூரிக்கெல்லாம் போயிருக்கிறார்.

கடல்வாழ் பழங்குடியினர்களாக நம்முடைய மீனவமக்கள் இருக்கிறார்கள். மலைவாழ் மக்களை ஆதிவாசிகள் என்றும் பழங் குடியினர் என்றும் நம் அரசாங்கம் பாதுகாத்து அவர்களுக்கு உரிய மரியாதையை கொடுத்துவருகிறது. இன்று பழங்குடியின சமூகம் சார்ந்த திரௌபதி முர்மு, ஜனாதிபதியாக இருக்கிறார்.

மீனவர்கள், பர்வத குலத்தினரை கடல்வாழ் பழங்குடியினராக அறிவிக்க வேண்டும். மீனவமக்கள் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து சிதறி கிடக்கிறார்கள். அவர்களை ஒன்றுப்படுத்த வேண்டும். அவர்களுடைய பண்பாட்டு அடையாளங்கள் மீட்கப்படவேண்டும். இதற்காக அவர்கள் கடல் வாழ் பழங்குடியினராக அறிவிக்க வேண்டும்.

இந்த நாட்டில் பரதவர்கள் (மீனவர்கள்) அதிகமாக இருந்ததால்தான் பாரதநாடு என்ற பெயர் வந்தது. தசாவதாரத்தில் முதல் அவதாரமே மச்ச அவதாரம்தான். வேதங்களை தொகுத்தவர் யாரு, வியாசர் அவர் ஒருமீனவர். இதுகுறித்து மத்திய அரசுக்கு கோரிக்கைகள் அனுப்பப்படும்.

உதயநிதி என்பதே சமஸ்கிருத பெயர்தான். கருணாநிதி, தயாநிதி, இன்பநிதி- இவையெல்லாமே சமஸ்கிருதபெயர்தான். சனாதனத்தை அவர்கள் தவறாக பிரச்சாரம் செய்கிறார்கள். சனாதனம் என்பது மதத்தோடு தொடர்புடையதும் ஜாதி யோடு தொடர்புடையதும் அல்ல. அது தர்மத்துடன் தொடர்புடையது.

திருக்குறளில் அறம், பொருள் , இன்பம். சனாதனத்தின் அடிப்படையே தர்மம் தான். சனாதன தர்மம் பழமையானது, எந்தளவுக்கு பழமையானதோ அந்தளவிற்கு புதுமையானது என அர்த்தம். யாரையும் துன்புறுத்தாமல் எல்லோரையும் அரவணைப்பது சனாதனம். ஒன்றேகுலம் ஒருவனே தேவன் இதுதான் சனாதனம். இதுகுறித்து யார் வேண்டுமானாலும் பேசலாம், கருத்துரிமை இருக்கிறது. ஆனால் இழிவுப்படுத்த கூடாது.

சனாதனத்தை இழிவுப்படுத்துவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். சனாதனம் தொற்று, எச்ஐவி என்றெல்லாம் பேசி மக்கள்மனதை புண்படுத்து கிறார்கள். சனாதனம் என்றால் என்ன என்ற ஒரு முடிவுக்கு வாங்க .அதன் பிறகு அது பற்றி பேசுவோம்.

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...