யாரும் எதிர்பாரா மாயத்தை செய்த யோகி

இருபது கோடி மக்களை கொண்ட மிகபெரும் மாநிலமான, அடிப்படை வசதிகளற்ற மாநிலமான உத்திரபிரதேசத்தில் யாரும் எதிர்பாரா மாயத்தை செய்து இயல்பு நிலமையினை மீட்டு எடுத்திருக்கின்றார் ஒரு காவி சன்னியாசி.

ஆம், உபியில் நடந்திருப்பது மாபெரும் ஆச்சரியம். இந்தியாவின் கொரோனா கால அச்சுறுத்தலாக பார்க்கபட்ட மாநிலம் அது.ஆனால் அந்தயோகி அசத்தியிருக்கின்றார் வெகுகுறுகிய கால முடக்கத்துக்கு பின் மாநிலம் சுத்தமாக மீண்டெழுந்திருக்கின்றது, பள்ளிகளும் கல்லூரிகளும் திறக்கபட்ட முதல்மாகாணமாக அதுதான் விளங்குகின்றது
இன்று இந்தியாவில் மட்டுமல்ல உலகிலே மிகஅதிசயமாக உற்றுநோக்கபடும் நபராக அவர்தான் விளங்குகின்றார், அவரால்தான் சுமார் 1500 ஆண்டுக்கு பின்பு அந்த கங்கை நதி தீரம் மெல்ல ஒளிவீச துவங்கியிருக்கின்றது.

ஆனால் இந்தியாவிலே அதிகம் படித்தவர் உள்ள மாநிலம், வெறும் 3 கோடிபேர் உள்ள மாநிலமான கேரளா கடும் சிக்கலில் உள்ளது நிச்சயம் கேரள மக்களிடம் சிக்கல் இல்லை ஆனால் ஆளும் கம்யூனிச அரசாங்கத்தின் இம்சை இது, கம்யூனிஸ்டுகள் எப்படிபட்டவர்கள் என்றால் இப்படித்தான்.

சரி, கேரள எதிர்கட்சி யார் என்றால் காங்கிரஸ், அது கம்யூனிஸ்டுகளுக்கு பெரியப்பா வகையறா என்பதால் ரகசியஇழை உண்டு இன்று உத்திரபிரதேசம் எனும் பெரும்மாநிலம் யோகி எனும் சன்னியாசியால் எழும்பி நிற்க, விஜயன் எனும் கம்யூனிச முதல்வரால் கொரோனா, ஜிகா, நிபா என மோசமாக கலங்கிநிற்கின்றது கேரளம்

அந்த காவி சன்னியாசி சாதாரணம் அல்ல, அவர் செய்திருப்பதும் எளிதான சாதனை அல்ல, உலகமே உற்று நோக்கும் பெரும் சாதனை அதுகேரள கம்யூனிஸ்டுகள் வெட்கத்தை விட்டு, அதை விட முக்கியமாக அந்த கம்யூனிச கொள்கையினை விட்டுவிட்டு அவரிடம் பாடம் படிப்பது நல்லது..

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...