மனைவி தன் கணவனிடம் அன்பைச் செலுத்துகிறாள் என்று கூறுகிறோம். அவள் ஆன்மா முழுவதுமே அவனிடத்தில் ஆழ்ந்து கிடக்கிறது. என்று நினைக்கிறாள். ஒரு குழந்தை பிறக்கிறது. அவளுடைய அன்பின் பாதியோ பாதிக்கு மேலோ அக்குழந்தை மீது செல்கிறது. கணவனிடத்தில் முன்பு இருந்தது போல் தனக்கு அவ்வளவு அன்பு இல்லாததை அவளே உணர்வாள். அதே போலத்தான்
தந்தைக்கும். ஆழ்ந்த அன்பை செலுத்தக் கூடிய பொருள்கள் கிடைத்ததும் பழைய அன்பு படிப்படியாக மறைகிறது. நீங்கள் பள்ளியிலிருந்தபோது தாய், தந்தையர் அல்லது பள்ளித்தோழர்கள் வாழ்க்கையில் மிகவும் அன்பானவர்கள் என்று நினைத்தீர்கள். அதற்குப் பிறகு கணவனோ, மனைவியோ ஆகும் நிலை வருகிறது. உடனே பழைய உணர்ச்சிகள் பறந்து விடுகின்றன. புதிய அன்பு உணர்ச்சிகளே தீவிரமடைகின்றன.
ஒரு விண்மீன் தோன்றுகிறது. பிறகு இன்னும் பெரியதொன்று தோன்றுகிறது. இறுதியில் சூரியன் தோன்றவே. சிறு ஒளிகள் அனைத்தும் மறைகின்றன. அந்த செஞ்சுடரே கடவுள், விண்மீன்கள் சிறிய அன்புகளாய் அமைகின்றன. இப்படிச் சூரிய ஒளி போன்ற அன்பு வெள்ளம் ஒருவனுக்குப் பொங்கி வருகையில் இறைப்பித்தன் என்று எமர்சன் கூறுகின்றாரே அத்தகைய பித்துப் பிடிக்கிறது. பிறகு மனிதன் கடவுளாக மாறுகிறான். அந்த அன்புக் கடலில் எல்லாம் ஆழ்ந்து கரைந்து விடுகின்றன. சாதாரண அன்பு என்பது வெறும் விலங்கின் கவர்ச்சிதான், இல்லையேல் அதில் ஆண், பெண் வேறுபாடு இருப்பானேன் ? ஒருவன் ஒரு உருவத்தின் முன்பு மண்டியிட்டுத் தொழுதால் அது கொடுமையான உருவ வழிபாடு * ஆனால் மனைவி அல்லது கணவன் முன்னால் முழங்காலிட்டால் அது சிறந்தது, போற்றத்தக்கது, அதில் எவ்விதத் தவறும் இல்லை.
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.