அன்பு நிரந்தரமானது அல்ல

மனைவி தன் கணவனிடம் அன்பைச் செலுத்துகிறாள் என்று கூறுகிறோம். அவள் ஆன்மா முழுவதுமே அவனிடத்தில் ஆழ்ந்து கிடக்கிறது. என்று நினைக்கிறாள். ஒரு குழந்தை பிறக்கிறது. அவளுடைய அன்பின் பாதியோ பாதிக்கு மேலோ அக்குழந்தை மீது செல்கிறது. கணவனிடத்தில் முன்பு இருந்தது போல் தனக்கு அவ்வளவு அன்பு இல்லாததை அவளே உணர்வாள். அதே போலத்தான்

தந்தைக்கும். ஆழ்ந்த அன்பை செலுத்தக் கூடிய பொருள்கள் கிடைத்ததும் பழைய அன்பு படிப்படியாக மறைகிறது. நீங்கள் பள்ளியிலிருந்தபோது தாய், தந்தையர் அல்லது பள்ளித்தோழர்கள் வாழ்க்கையில் மிகவும் அன்பானவர்கள் என்று நினைத்தீர்கள். அதற்குப் பிறகு கணவனோ, மனைவியோ ஆகும் நிலை வருகிறது. உடனே பழைய உணர்ச்சிகள் பறந்து விடுகின்றன. புதிய அன்பு உணர்ச்சிகளே தீவிரமடைகின்றன.

ஒரு விண்மீன் தோன்றுகிறது. பிறகு இன்னும் பெரியதொன்று தோன்றுகிறது. இறுதியில் சூரியன் தோன்றவே. சிறு ஒளிகள் அனைத்தும் மறைகின்றன. அந்த செஞ்சுடரே கடவுள், விண்மீன்கள் சிறிய அன்புகளாய் அமைகின்றன. இப்படிச் சூரிய ஒளி போன்ற அன்பு வெள்ளம் ஒருவனுக்குப் பொங்கி வருகையில் இறைப்பித்தன் என்று எமர்சன் கூறுகின்றாரே அத்தகைய பித்துப் பிடிக்கிறது. பிறகு மனிதன் கடவுளாக மாறுகிறான். அந்த அன்புக் கடலில் எல்லாம் ஆழ்ந்து கரைந்து விடுகின்றன. சாதாரண அன்பு என்பது வெறும் விலங்கின் கவர்ச்சிதான், இல்லையேல் அதில் ஆண், பெண் வேறுபாடு இருப்பானேன் ? ஒருவன் ஒரு உருவத்தின் முன்பு மண்டியிட்டுத் தொழுதால் அது கொடுமையான உருவ வழிபாடு * ஆனால் மனைவி அல்லது கணவன் முன்னால் முழங்காலிட்டால் அது சிறந்தது, போற்றத்தக்கது, அதில் எவ்விதத் தவறும் இல்லை.

விவேகானந்தர் கல்வி சிந்தனைகள் , விவேகானந்தர் சிந்தனைகள், விவேகானந்தர் கருத்துக்கள்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பி ...

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பிரதமர் மோடி மேற்கு ஆசியா மற்​றும் உக்​ரைன் போர்​களுக்கு விரைவில் முடிவு ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இர ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; -இந்திய ஷியா பிரிவு முஸ்லீம் தலைவர். "இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; இறந்தவர்கள் நம் தலைவர்கள் அல்ல"- ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சிய ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சியினை கொடுத்த ஈரான் ஈரானின் செயல்பாடுகள் விபரீதமாக உள்ளன, யாரும் எதிர்பாராதபடி துருக்கியினை ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா அமித்ஷாவின் ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையி ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் பாடமெடுப்பதெல்லாம் நகைப்புக்குரியது. ஈரனின் ஐஆர்ஐஎஸ் தேனா போர்கப்பல் இந்தியாவின் கடற்கரையிலிருந்து 200 ...

வெளியுறவுக் கொள்கை காலாவதியான ...

வெளியுறவுக் கொள்கை   காலாவதியான காங்கிரஸின் சித்தாந்தங்களால் அல்ல “இந்தியா கண்மூடித்தனமாக ஈரான் பக்கம் நிற்க வேண்டும் என்று ...

மருத்துவ செய்திகள்

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...