அன்பு நிரந்தரமானது அல்ல

மனைவி தன் கணவனிடம் அன்பைச் செலுத்துகிறாள் என்று கூறுகிறோம். அவள் ஆன்மா முழுவதுமே அவனிடத்தில் ஆழ்ந்து கிடக்கிறது. என்று நினைக்கிறாள். ஒரு குழந்தை பிறக்கிறது. அவளுடைய அன்பின் பாதியோ பாதிக்கு மேலோ அக்குழந்தை மீது செல்கிறது. கணவனிடத்தில் முன்பு இருந்தது போல் தனக்கு அவ்வளவு அன்பு இல்லாததை அவளே உணர்வாள். அதே போலத்தான்

தந்தைக்கும். ஆழ்ந்த அன்பை செலுத்தக் கூடிய பொருள்கள் கிடைத்ததும் பழைய அன்பு படிப்படியாக மறைகிறது. நீங்கள் பள்ளியிலிருந்தபோது தாய், தந்தையர் அல்லது பள்ளித்தோழர்கள் வாழ்க்கையில் மிகவும் அன்பானவர்கள் என்று நினைத்தீர்கள். அதற்குப் பிறகு கணவனோ, மனைவியோ ஆகும் நிலை வருகிறது. உடனே பழைய உணர்ச்சிகள் பறந்து விடுகின்றன. புதிய அன்பு உணர்ச்சிகளே தீவிரமடைகின்றன.

ஒரு விண்மீன் தோன்றுகிறது. பிறகு இன்னும் பெரியதொன்று தோன்றுகிறது. இறுதியில் சூரியன் தோன்றவே. சிறு ஒளிகள் அனைத்தும் மறைகின்றன. அந்த செஞ்சுடரே கடவுள், விண்மீன்கள் சிறிய அன்புகளாய் அமைகின்றன. இப்படிச் சூரிய ஒளி போன்ற அன்பு வெள்ளம் ஒருவனுக்குப் பொங்கி வருகையில் இறைப்பித்தன் என்று எமர்சன் கூறுகின்றாரே அத்தகைய பித்துப் பிடிக்கிறது. பிறகு மனிதன் கடவுளாக மாறுகிறான். அந்த அன்புக் கடலில் எல்லாம் ஆழ்ந்து கரைந்து விடுகின்றன. சாதாரண அன்பு என்பது வெறும் விலங்கின் கவர்ச்சிதான், இல்லையேல் அதில் ஆண், பெண் வேறுபாடு இருப்பானேன் ? ஒருவன் ஒரு உருவத்தின் முன்பு மண்டியிட்டுத் தொழுதால் அது கொடுமையான உருவ வழிபாடு * ஆனால் மனைவி அல்லது கணவன் முன்னால் முழங்காலிட்டால் அது சிறந்தது, போற்றத்தக்கது, அதில் எவ்விதத் தவறும் இல்லை.

விவேகானந்தர் கல்வி சிந்தனைகள் , விவேகானந்தர் சிந்தனைகள், விவேகானந்தர் கருத்துக்கள்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...