சிறந்த வாழ்க்கைத் துணையை அமைத்துத் தரும் அபூர்வமான ஆனி மாத அம்மன் வழிபாடு!!!

 கலியுகத்தில் பிறந்தாலே ஏதாவது ஒரு ஏக்கம் அல்லது பிரச்னைகள் இருப்பது சகஜம்.அதுவும் பெண்ணாகப் பிறந்துவிட்டால் சொல்லவும் வேண்டுமா? அப்பப்பா !!

முன் ஜன்ம தோஷங்கள் நிவர்த்தி அடையவும்,கன்னிப்பெண்ணுக்கு

நல்ல கணவன் அமையவும்,இளைஞருக்கு சிறந்த மனைவி அமையவும் பின்வரும் வழிபாட்டுமுறையைப் பின்பற்றி தங்களுடைய வாழ்க்கையை வளமாகவும்,சிறப்பாகவும் அமைத்துக் கொள்ளலாம்.ஏனெனில் இந்த ஆனி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வரும்.இந்த வருடம் 13.7.2012 அன்று இந்த நாள் அமைந்திருக்கிறது.

இந்த நாளில் காலை 10.30 முதல் 12 மணிக்குள் 9 கொய்யாப்பழங்கள்,முழுக்க முழுக்க ரோஜாப்பூக்களால் கட்டப்பட்ட மாலை;நெய் தீபம்,டயமண்டு கல்கண்டு குறைந்தது 1 கிலோ;எலுமிச்சை சாதம்(லெமன்) உடன் மிளகு சேர்த்த சாம்பார் இவைகளைக் கொண்டு அருகில் இருக்கும் அம்மன் கோவிலுக்குக் கொண்டு சென்று இந்த 1.30 மணி நேரமும் இருந்து மனப்பூர்வமாக வழிபட வேண்டும்.அப்போது ஒரு எலுமிச்சை பழத்தையும் கொண்டு வர வேண்டும்;அதில் ஒரு புதிய கத்தியை சொருகி அம்மன் பாதத்திற்குக் கீழே அல்லது அம்மனின் கைக்கு அருகில் வைக்க வேண்டும், பிறகு அந்த படையலான எலுமிச்சை சாதத்தையும்,டயமண்டு கல்கண்டையும் அங்கே இருப்பவர்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும், மீதியை வீட்டுக்குக் கொண்டு வரலாம்.

இப்படிச் செய்ய முடிவெடுத்த நாளிலிருந்து 4 மாதங்களுக்கு இந்த வழிபாடு செய்பவர்கள் மட்டும் அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்த வேண்டும்.இந்த வழிபாட்டினை உச்சினி மாகாளி,காளியம்மன் முதலான உக்கிரமான பெண்தெய்வக்கோவில்களில் ஒருபோதும் செய்யக் கூடாது  சாந்தமான எந்த ஒரு பெண் தெய்வத்து கோவில்களிலும் (லட்சுமி, சரஸ்வதி, சக்தி, ஈஸ்வரி) இந்த வழிபாட்டை ஒரு இளைஞன் செய்தால் மிகச் சிறந்த மனைவி அமைவாள்;ஒரு கன்னி செய்து வழிபட்டால், பொறுப்பான அன்பான கணவன் அமைவான்.இந்த தெய்வீக ரகசியத்தை நமக்கு அருளிய

நமது ஆன்மீக குரு திரு.சிவமாரியப்பன் அவர்களுக்கு நன்றிகள்!!!
இப்படிக்கு ஜோதிட முனி கை.வீரமுனி,ஸ்ரீவில்லிபுத்தூர்

One response to “சிறந்த வாழ்க்கைத் துணையை அமைத்துத் தரும் அபூர்வமான ஆனி மாத அம்மன் வழிபாடு!!!”

  1. Ganesan Rajesh says:

    ஐயா வணக்கம்,இந்த கட்டுரையில் அம்மன் வழிபாடு நான்குமாதங்கள்,நான்குமாதங்களினுள் அனைத்து வெள்ளிக்கிறழமையும் வழிபடவேண்டுமா என்பது எனக்கு தெளிவுபெறவில்லை.தயவு செய்து விளக்கவும். வாட்ஸ் அப்:006598601814

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரியணை என்பது அறிவாலயத்திற்கு � ...

அரியணை என்பது அறிவாலயத்திற்கு எட்டாக்கனியாக மாறும்; நயினார் நாகேந்திரன் ''வரும் 2026ல் தமிழக மக்கள் கொடுக்கப் போகும் ...

ஆதாரமற்ற விஷ வதந்தி பரப்புவோர் ...

ஆதாரமற்ற விஷ வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க போராட்டம் – நயினார் நாகேந்திரன் 'ராணுவத்தின் மீதும், தேச பாதுகாப்பின் மீதும், ஆதாரமற்ற விஷ ...

தமிழக மீனவர்கள் நலன்களுக்காக ஆ� ...

தமிழக மீனவர்கள் நலன்களுக்காக ஆந்திராவில் ஒலித்த குரல்: பேச்சு நடத்த பவன் கல்யாண் வலியுறுத்தல் தமிழக மீனவர்கள் தாக்குதல் தொடர்பாக இந்தியா, இலங்கை பேசசுவார்த்தை ...

பயங்கரவாதத்திற்கு எதிரான போரா� ...

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு: மோடியிடம் ரஷ்ய அதிபர் புடின் உறுதி பிரதமர்மோடியுடனானதொலைபேசி உரையாடலில் பயங்கரவாதத்திற்குஎதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு ...

பாதுகாப்பு துறை செயலருடன் பிரத� ...

பாதுகாப்பு துறை செயலருடன் பிரதமர் மோடி ஆலோசனை இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் ...

இந்தியாவிற்கு தேவை கூட்டாளிகள� ...

இந்தியாவிற்கு தேவை கூட்டாளிகள் – ஜெய்சங்கர் ''இந்தியா உடன் ஆழமான உறவை பேணுவதற்கான தங்கள் விருப்பத்தையும், ...

மருத்துவ செய்திகள்

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...