சிறந்த வாழ்க்கைத் துணையை அமைத்துத் தரும் அபூர்வமான ஆனி மாத அம்மன் வழிபாடு!!!

 கலியுகத்தில் பிறந்தாலே ஏதாவது ஒரு ஏக்கம் அல்லது பிரச்னைகள் இருப்பது சகஜம்.அதுவும் பெண்ணாகப் பிறந்துவிட்டால் சொல்லவும் வேண்டுமா? அப்பப்பா !!

முன் ஜன்ம தோஷங்கள் நிவர்த்தி அடையவும்,கன்னிப்பெண்ணுக்கு

நல்ல கணவன் அமையவும்,இளைஞருக்கு சிறந்த மனைவி அமையவும் பின்வரும் வழிபாட்டுமுறையைப் பின்பற்றி தங்களுடைய வாழ்க்கையை வளமாகவும்,சிறப்பாகவும் அமைத்துக் கொள்ளலாம்.ஏனெனில் இந்த ஆனி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வரும்.இந்த வருடம் 13.7.2012 அன்று இந்த நாள் அமைந்திருக்கிறது.

இந்த நாளில் காலை 10.30 முதல் 12 மணிக்குள் 9 கொய்யாப்பழங்கள்,முழுக்க முழுக்க ரோஜாப்பூக்களால் கட்டப்பட்ட மாலை;நெய் தீபம்,டயமண்டு கல்கண்டு குறைந்தது 1 கிலோ;எலுமிச்சை சாதம்(லெமன்) உடன் மிளகு சேர்த்த சாம்பார் இவைகளைக் கொண்டு அருகில் இருக்கும் அம்மன் கோவிலுக்குக் கொண்டு சென்று இந்த 1.30 மணி நேரமும் இருந்து மனப்பூர்வமாக வழிபட வேண்டும்.அப்போது ஒரு எலுமிச்சை பழத்தையும் கொண்டு வர வேண்டும்;அதில் ஒரு புதிய கத்தியை சொருகி அம்மன் பாதத்திற்குக் கீழே அல்லது அம்மனின் கைக்கு அருகில் வைக்க வேண்டும், பிறகு அந்த படையலான எலுமிச்சை சாதத்தையும்,டயமண்டு கல்கண்டையும் அங்கே இருப்பவர்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும், மீதியை வீட்டுக்குக் கொண்டு வரலாம்.

இப்படிச் செய்ய முடிவெடுத்த நாளிலிருந்து 4 மாதங்களுக்கு இந்த வழிபாடு செய்பவர்கள் மட்டும் அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்த வேண்டும்.இந்த வழிபாட்டினை உச்சினி மாகாளி,காளியம்மன் முதலான உக்கிரமான பெண்தெய்வக்கோவில்களில் ஒருபோதும் செய்யக் கூடாது  சாந்தமான எந்த ஒரு பெண் தெய்வத்து கோவில்களிலும் (லட்சுமி, சரஸ்வதி, சக்தி, ஈஸ்வரி) இந்த வழிபாட்டை ஒரு இளைஞன் செய்தால் மிகச் சிறந்த மனைவி அமைவாள்;ஒரு கன்னி செய்து வழிபட்டால், பொறுப்பான அன்பான கணவன் அமைவான்.இந்த தெய்வீக ரகசியத்தை நமக்கு அருளிய

நமது ஆன்மீக குரு திரு.சிவமாரியப்பன் அவர்களுக்கு நன்றிகள்!!!
இப்படிக்கு ஜோதிட முனி கை.வீரமுனி,ஸ்ரீவில்லிபுத்தூர்

One response to “சிறந்த வாழ்க்கைத் துணையை அமைத்துத் தரும் அபூர்வமான ஆனி மாத அம்மன் வழிபாடு!!!”

  1. Ganesan Rajesh says:

    ஐயா வணக்கம்,இந்த கட்டுரையில் அம்மன் வழிபாடு நான்குமாதங்கள்,நான்குமாதங்களினுள் அனைத்து வெள்ளிக்கிறழமையும் வழிபடவேண்டுமா என்பது எனக்கு தெளிவுபெறவில்லை.தயவு செய்து விளக்கவும். வாட்ஸ் அப்:006598601814

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வர ...

அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வருவேன் வளர்ச்சிக்கு ஆர்வமுள்ள வட்டாரங்கள் என்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் ...

காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மை ...

காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மைப் பணியில் ஈடுபட்ட மோடி காந்தி ஜெயந்தியையொட்டி பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித் ...

பேச்சுசுதந்திரம் குறித்து யார ...

பேச்சுசுதந்திரம் குறித்து யாரும் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் “கனடாவில் இந்திய துாதரக அதிகாரிகள் மிரட்டப்படுவதால், அவர்களுக்கு மிகப்பெரிய ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

மருத்துவ செய்திகள்

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...