பா.ஜ.க மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உட்ப்பட நூற்றுகனக்கானோர் காவல்துறையால் கைது

 நாகர்‌கோவில் அருகே பா.ஜ.க மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உட்ப்பட நூற்றுகனக்கானோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தின் நித்திரவிளையில் நடந்த ஒரு பிரச்னையில் ஒருவர் கொலைசெய்யப்பட்டார். இதில், மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்ம ராஜ் உள்ளிட்ட 7 பேரின் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

தர்மராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு மாவட்ட பாரதிய ஜனதா நிர்வாகிகள் கடும்எதிர்ப்பு தெரிவித்தனர். இதைகண்டித்து மார்த்தாண்டத்தில் மறியல் போராட்டத்தை நடத்த போவதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் குமரி மாவட்டத்திற்குள் காவல்துறையினர் அனுமதியின்றி ஊர்வலங்கள்-போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு பிரவேஷ் குமார் அறிவித்தார். இதற்கு எதிர்ப்புதெரிவித்த பா.ஜ.கவினர் மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணனின் தலைமையில் போலீசாரின் தடையைமீறி மார்த்தாண்டத்தில் மறியல் செய்வோம் என தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து பாரதிய  ஜனதா மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தனது ஆதரவாளர்களுடன் வந்தார். அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர், திருவனந்தபுரம் மருத்துவமனைக்கு செல்வதாகவும் தன்னை செல்ல அனுமதிக்கும் படியும் கூறினார். ஆனால் காவல்துறையினர் அவரை தடுத்துநிறுத்தினர். இதனால் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் பா,ஜ,க வினர் ஆத்திரமடைந்து கோஷம் எழுப்பினர். அங்கேயே சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து பொன். ராதாகிருஷ்ணனையும், அவருடன் இருந்தவர்களையும் கைது செய்தனர். மார்த்தாண்டம் மறியலுக்குசென்ற எம்.ஆர். காந்தியும், அவருடன் சென்ற வர்களும் தோட்டியோடு பகுதியில் கைதானார்கள். மேலும் பாரதிய ஜனதா தொண்டர்கள் பலரும் சோதனை சாவடிகளில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...