ராஜபக்‌ஷேவுக்கு அழைப்பு விடுத்தது சுஷ்மாவா பொன்.ராதாகிருஷ்ணன் மறுப்பு

ராஜபக்‌ஷேவுக்கு அழைப்பு விடுத்தது  சுஷ்மாவா பொன்.ராதாகிருஷ்ணன் மறுப்பு மத்திய பிரதேசத்தில் வரும் 21-ம் தேதி நடைபெற இருக்கும் புத்தமத நிகழ்ச்சிக்கு இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே வருகைதர இருக்கிறார் . இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு ராஜ பக்‌ஷேவுக்கு அளப்பு விடுத்தது பா.ஜ.க தலைவர் சுஷ்மா சுவராஜ்தான் என சமிபத்தில் வைகோ உள்ளிட்ட சில தலைவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை பாரதீய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மறுத்துள்ளார்

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; , ‘ராஜ பக்‌ஷேவுக்கு, சுஷ்மா அழைப்பு விடுத்ததாக கூறுவது தவறான தகவல். உண்மையை அறிவதற்க்காக நான் சுஷ்மாவை தொலைபேசியில் தொடர்புகொண்டேன். அப்போது இந்த தகவலை திட்ட வட்டமாக மறுத்த சுஷ்மா, ராஜபக்‌ஷேவை தான் அழைக்க வில்லை என்று கூறினார்’ என்றார்.

மேலும், ‘ராஜபக்‌ஷேவின் இந்திய வருகையை நாங்கள் கடுமையாக எதிர்க் கிறோம். இருப்பினும் ராஜபக்‌ஷே, பூடான் பிரதமர் உள்ளிட்ட அனைவரையும் மத்திய அரசு தான் அழைத்துள்ளது. இந்த விவகாரத்தில் பா.ஜ.க மீது பழிபோட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இந்த பிரச்சினையில் மத்திய அரசுக்கு உதவநினைக்கும் சிலர் சுஷ்மா மீது பழிபோடுகின்றனர்’ எனவும் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட தமிழக மீனவ குடும்பங்களை சுஷ்மா சந்தித்தது, தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக டெல்லியில் போராட்டம்நடத்தியது, இலங்கை தமிழர் களுக்கு ஆதரவாக சுஷ்மா பல் வேறு முயற்சிகளை மேற்கொண்டது போன்றவற்றை தமிழக பாரதீய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நினைவு கூர்ந்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...