இது அகில இந்திய காங்கிரஸ் கட்சியல்ல; அகில இந்திய நிலக்கரி காங்கிரஸ் கட்சி. இது ஒரு மக்கள் விரோத அரசு; என்று , பி,ஜே.பி கட்சிதலைவர் நிதின் கட்காரி குற்றம்சாட்டியுள்ளார்.
பி,ஜே.பி,யின் தொழிற்சங்க பிரிவின் கூட்டம், டில்லியில் நேற்று நடைபெற்றது .
இதில், கட்சிதலைவர் நிதின் கட்காரி பேசியதாவது: ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை, கவிழ்ப்பதர்க்கான எந்த திட்டமும் எங்களுக்கு இல்லை. அந்தகூட்டணியை, ஆதரிப்பவர்கள் யார், எதிர்ப்பவர்கள் யார் என்பதை, அவர்களே முடிவுசெய்யட்டும். நாங்கள் அதில் தலையிட மாட்டோம்.
மத்திய அரசை வெளியிலிருந்து ஆதரிக்கும் இரண்டு கட்சிகள், இரட்டைவேடம் போடுகின்றன. ஒரு பக்கம், மத்திய அரசை ஆதரிப்பதாக கூறிவிட்டு, மறு பக்கம், சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதை எதிர்க்கின்றன.
ஸ்பெக்ட்ரம், நிலக்கரி சுரங்க ஊழல் போன்றவற்றில் , மத்திய அரசின் முகத்தில் கரி பூசப் பட்டுள்ளது. இது அகில இந்திய காங்கிரஸ் கட்சியல்ல; அகில இந்திய நிலக்கரி காங்கிரஸ் கட்சி. இது ஒரு மக்கள் விரோத அரசு; இவர்கள் மக்களின் நலனுக்காக, எதையும் செய்யப்போவது இல்லை. இவ்வாறு, நிதின் கட்காரி பேசினார்.
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.