தமிழக பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
நிலக்கரி ஊழல், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி, விலையேற்றம் உள்ளிட்ட மக்கள் விரோதசெயல்களில்
மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
இதனிடையில் நவம்பர் 22-ம் தேதி நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கூட இருக்கிறது . இத்தொடர் கூடுவதற்கு முன்பு மக்களிடையே ஊழல், விலைவாசி உயர்வு குறித்து எடுத்துரைக்க பாஜக முடிவு செய்துள்ளது.
அதன்படி நாடுமுழுவதும் வரும் 21-ந்தேதி மாவட்ட வாரியாக ஆர்ப்பாட்டங்களை நடத்த பாஜக தேசிய தலைமை முடிவெடுத்திருக்கிறது . தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் வரும் 21-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
Leave a Reply
You must be logged in to post a comment.