எழுதி கொடுப்பதை அப்படியே வாசிக்கும் பழக்கத்தை சோனியா கைவிட வேண்டும்

எழுதி கொடுப்பதை அப்படியே வாசிக்கும் பழக்கத்தை சோனியா கைவிட வேண்டும் குஜராத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு முதல்கட்டமாக 87 தொகுதிகளில் கடந்த 13ம் தேதி வாக்கு பதிவு அமைதியாக நடந்துமுடிந்தது. இரண்டாம் கட்டமாக நாளை மறுநாள் 95 தொகுதிகளுக்கு வாக்கு பதிவு நடை பெறுகிறது. இதனை தொடர்ந்து

பாஜக தலைவர்கள் குஜராத்தில் பல இடங்களில் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டார்.

மஞ்சள்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் யோகேஷ் பட்டேலை ஆதரித்து மேனகா காந்தி பேசியதாவது:

தேர்தல் பிரச்சாரத்தின்போது மற்றவர்கள் எழுதிகொடுப்பதை அப்படியே வாசிக்கும் பழக்கத்தை சோனியா கைவிடவேண்டும். இந்தியாவில் இருந்து ஆங்கிலம் தெரியாதபலர் வெளிநாடுகளுக்கு சென்றவுடன் ஆங்கிலம் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இந்தியா வந்து பல ஆண்டுகள் ஆகியும்கூட இன்னும் ஒருவர் இந்தியை முழுமையாக கற்றுக்கொள்ளாமல் இருக்கிறார்.

நரேந்திர மோடியை சிறந்த மார்க்கெட்டிங் மேலாளர் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். நல்ல பொருட்களைதான் சிறப்பாக மார்க்கெட் செய்யமுடியும். மோசமாக பொருட்களை மார்க்கெட் செய்யமுடியாது என்பதை ராகுல் புரிந்துகொள்ள வேண்டும். நரேந்திர மோடிக்கு தேசிய அளவிலும் சிறப்பாக செயல்பட கூடிய திறமை உண்டு என்று கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...