பாரதிய ஜனதாவில் இருந்து விலகி தனி கட்சி ஆரம்பித்த, உபி முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், மீண்டும் தாய்க்கட்சியான பாரதிய ஜனதாவில் இணைகிறார்.
கடந்த 1991-92 , 1997-99 கால கட்டத்தில் பாரதிய ஜனதா சார்பில்
உபி., முதல்வராக பதவிவகித்தவர் கல்யாண் சிங். பாரதிய ஜனதா கட்சியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடால் கட்சியைவிட்டு விலகி பிறகு மீண்டும் கடந்த 2004ஆம் வருடம் பாஜக.,வில் சேர்ந்தார்.
2009ஆம் ஆண்டு மீண்டும் கட்சியில் இருந்து பிரிந்த கல்யாண் சிங், கிராந்தி என புதியகட்சியை தொடங்கினார். இந்நிலையில் கல்யாண்சிங் மீண்டும் பாஜகவில் இணைய முடிவு செய்துள்ளார். இதன் ஒரு பகுதியாக பாஜக. தலைவர் நிதின்கட்காரியை சந்தித்து பேசினார்.
இதையடுத்து தனது கிராந்தி கட்சியை கலைத்து விட்டு பா.ஜ.க.வில் இணைய கல்யாண்சிங் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது . வரும் பொங்கல் பண்டிகைக்கு பிறகு உபி.,யில் நடைபெறும் விழாவில் கல்யாண்சிங், தனது தொண்டர்களுடன் பாஜக.வில் இணைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
உபி.,யில் இழந்த செல்வாக்கை திரும்பபெற கல்யாண் சிங்கின் வருகை உதவியாக இருக்கும் என்பதில் எந்த மற்று கருத்தும் இல்லை.
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.