அமெரிக்க மக்களையும், உலக நாடுகளையும் திரும்பிபார்க்க வைத்தவர் விவேகானந்தர்

அமெரிக்க மக்களையும், உலகநாடுகளையும் திரும்பிபார்க்க வைத்தவர் விவேகானந்தர் சுவாமி விவேகானந்தர்கூட பெண்களைதான் முன்னிலை படுத்துகிறார் . அமெரிக்காவின் சிகாகோ மாநாட்டில் பேசும்போது கூட சகோதரிகளே என கூறி அமெரிக்க மக்களையும், உலகநாடுகளையும் திரும்பிபார்க்க வைத்தவர் விவேகானந்தர் என தமிழக பா.ஜ.க , தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் நடந்துவருகிறது. “எழுமின் விழிமின்’ எனும் தலைப்பில் நடந்த முகாமை தொடங்கி வைத்து தமிழக பா.ஜ.க , தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது;

ஒருகுடும்பத்தில் ஒரு பெண் படித்தால் அந்த_குடும்பம் மற்றும் அந்த தலைமுறையே படித்ததாக அர்த்தம். பெண்களுக்கு அந்தகாலத்திலேயே சுதந்திரமும், ஆட்சிசெய்யும் அதிகாரமும் இருந்தது என்று உத்திரமேரூர் கல்வெட்டுகள் எடுத்து கூறுகிறது. இந்த கல்லூரியிலும் மாணவர்களைவிட மாணவிகளே அதிகம் படிக்கின்றனர். மாணவ, மாணவிகளாகிய நீங்கள் சுவாமி விவேகானந்தரின் கருத்துக்கள், கொள்கைகள், தத்துவங்களை படித்தால் உங்கள வாழ்க்கை உயர்ந்த நிலையை அடையும்.

அவரின் கருத்துக்களை பின்பற்றினால் உங்களை எவராலும் வெல்லமுடியாது. ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்குமு சிறந்த எடுத்துக் காட்டு ராமகிருஷ்ண பரமகம்ஷர். மாணவர்கள் தான் குருவை தேடி செல்வார்கள். ஆனால்குரு தேடிய ஒரே_சீடர், மாணவர் என்றால் அது விவேகானந்தர். அன்னை பராசக்தியே அவர் முன் தோன்றியபோது கூட, எனக்கு ஞானத்தைகொடு, துறவறத்தைகொடு என கேட்டவர் சுவாமி விவேகானந்தர்.

சுவாமி விவேகானந்தர்கூட பெண்களைதான் முன்னிலை படுத்துகிறார். அமெரிக்காவின் சிகாகோ மாநாட்டில் பேசும்போது கூட சகோதரிகளே என கூறி அமெரிக்க மக்களையும், உலகநாடுகளையும் திரும்பிபார்க்க வைத்தவர் சுவாமி விவேகானந்தர். இவ்வாறு அவர்பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...