கவர்னர் சர் ஆண்ட்ரு பிரேசரை தூக்கமின்றி புலம்ப வைத்த பரீந்திரகுமார் கோஷ் 2

 கவர்னர் சர் ஆண்ட்ரு பிரேசரை தூக்கமின்றி புலம்ப வைத்த பரீந்திரகுமார் கோஷ்  2கனையலால் மற்றும் சத்தியேந்திரநாத் போஸ் ஆகிய இருவரும் நாராயண் கோஸ்வாமியின் கால்களை ஆளுக்கொன்றாய் பிடித்து அவன் உடலை கிழித்தே கொன்ற வீர வரலாற்றினை கடந்த பதிவுகளில் பார்த்தோம்.

அப்ருவராகி, அரசாங்க ஆதரவு பெற்று விடுதலையாகலாம் என்று எண்ணிய துரோகியை நிரந்தர விடுதலை கொடுத்து உலகத்தை விட்டே அனுப்பி கொண்டிருந்த போது சத்தம் கேட்டு ஓடி வந்த அதிகாரிகள் அவர்களை மடக்கி பிடித்து உதைத்தனர். சொல்ல முடியாத சித்திரவதைகளுக்கு உள்ளாகினர்,

நாராயண் கோஸ்வாமியை கொன்றதற்காக அவர்கள் மீது தனியாக ஒரு கொலை வழக்கு போட்டு இருவரையும் தனித்தனியே தூக்கிலிட்டனர்.

இவ்வளவுதானா வீரசாகஸம் ? பானர்ஜி என்ற போலிஸ் அதிகாரி அரசாங்கத் தரப்பில் சாட்சி சொல்ல கோர்ட்டுக்கு வந்தார், வரும் போதே யாரோ ஒருவர் அவரை கோர்ட்டு வாசலிலேயே குருவி சுடுவது போல சுட்டுக் கொன்றுவிட்டார், சுட்டது யார் என்று கடைசிவரைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை வெள்ளைய போலிஸுக்கு!

செஷன்ஸ் கோர்ட்டில் இந்த வழக்கு நடந்த போது சர்க்கார் தரப்பு வழக்கறிஞரான அசுதேஸ் பிஸ்வாஸை, சாரு சந்திர ராய் என்ற இளைஞன் சுட்டுவிட்டு , தூக்கு கயிற்றில் "வந்தே மாதரம்" என்று முழங்கிய படியே செத்துப்போனான், உயர்நீதி மன்றத்தில் சாட்சி சொல்ல வந்த சம்சுவ் ஆலம் என்ற டெபுடி போலிஸ் சூப்பிரண்டென்டை இன்னொரு சுத்த வீரன் சத்தமில்லாமல் கொன்றுவிட்டு , சாவு தனக்கு துச்சம் என்று சொல்லாமல் சொன்னான்.!

இப்படி வியப்புக்கு மேல் வியப்பு, திகைப்புக்கு மேல் திகைப்பு, என்று தொடர்ந்து கொண்டே போன இந்த அலிப்பூர் சதி வழக்கினை, ஆங்கில அரசு இ.பி.கோ. 121, 121A, 122, 123 ஆகிய செக்ஷன்களின் மீது தொடுத்து நடத்தினர்.

அரவிந்தருக்கும் , இதர எதிரிகளுக்கும் தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் ஆஜராகி, அரசு தரப்பு வாதத்தினை பொடி பொடியாக்கினர், இவ்வளவுக்கும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவரும் தங்களின் குற்றங்களை மறுக்கவோ மறைக்கவோ இல்லை,

இந்த வழக்கின் பிரதான குற்றவாளிகளில் ஒருவரான பரிந்திரகுமார் கோஷ் கொடுத்த வாக்குமூலம் ஒவ்வொரு இந்தியனும் எண்ணி எண்ணி பெருமை கொள்ளத்தக்க வீர காவியம் ஆகும்.. இது பற்றி அடுத்த பதிவுகளில் பதிவு செய்கிறேன்.

நன்றி ; ராம்குமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...