மக்கள் அளித்ததீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன்

மக்கள் அளித்ததீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன் கர்நாடக சட்டப் பேரவை தேர்தலில் மக்கள் அளித்ததீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன் என முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ்கட்சி வெற்றி பெற்றுள்ளது. மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குகிறேன். ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி என்பது இயல்பே .

கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜ.க., தலைமையிலான அரசு ஏராளமான வளர்ச்சிப்பணிகளை செயல்படுத்தியது. அதைக்காட்டிலும், பாஜக ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் ஊழல், உள்கட்சிப்பூசல் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி செய்யப்பட்ட பொய்ப்பிரசாரத்தை நம்பி மக்கள் வாக்களித்துள்ளனர்.

பா.ஜ.க., ஆட்சியில் செயல் படுத்திய வளர்ச்சிப்பணிகள் தொடர்பான தகவலை மக்களிடம் கொண்டுசேர்ப்பதில் இடறியுள்ளோம். இதனால், பா.ஜ.க.,வுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ்கட்சி பெரும்பான்மை இடங்களில் வென்றுள்ளது. இது அந்த கட்சிக்கு கிடைத்த வெற்றியல்ல. மாறாக, பா.ஜ.க.,வில் நிலவிய உள்கட்சிப்பூசல் போன்ற காரணங்களுக்காக எங்கள் கட்சிக்கு எதிராக அளித்தவாக்குகள் காங்கிரஸýக்கு சாதகமாகியுள்ளது. எனினும், மக்கள்தீர்ப்பை ஏற்கிறோம்.

சட்டப்பேரவையில் எதிர்க் கட்சி வரிசையில் அமர்ந்து மக்கள்பணி செய்வோம். மக்கள் பிரச்னைகளுக்காக ஆக்கப்பூர்வமான எதிர்க் கட்சியாக செயல்படுவோம். கடந்த 5 ஆண்டு காலம் கர்நாடகத்தை ஆளும்வாய்ப்பை மக்கள் பாஜகவுக்கு அளித்திருந்தனர். அதற்காக மக்களை நன்றியோடு நினைத்துப்பார்க்கிறோம்.

ஆளும் கட்சியும், எதிர்க் கட்சியும் ஜனநாயகத்தில் முக்கியதூண்களாகும். அந்தவகையில், கர்நாடக சட்டப் பேரவையில் முக்கிய இடத்தை மக்கள் பா.ஜ.க.,வுக்கு அளித்துள்ளனர் என்றார் ஜெகதீஷ் ஷெட்டர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...