மக்கள் அளித்ததீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன்

மக்கள் அளித்ததீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன் கர்நாடக சட்டப் பேரவை தேர்தலில் மக்கள் அளித்ததீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன் என முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ்கட்சி வெற்றி பெற்றுள்ளது. மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குகிறேன். ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி என்பது இயல்பே .

கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜ.க., தலைமையிலான அரசு ஏராளமான வளர்ச்சிப்பணிகளை செயல்படுத்தியது. அதைக்காட்டிலும், பாஜக ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் ஊழல், உள்கட்சிப்பூசல் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி செய்யப்பட்ட பொய்ப்பிரசாரத்தை நம்பி மக்கள் வாக்களித்துள்ளனர்.

பா.ஜ.க., ஆட்சியில் செயல் படுத்திய வளர்ச்சிப்பணிகள் தொடர்பான தகவலை மக்களிடம் கொண்டுசேர்ப்பதில் இடறியுள்ளோம். இதனால், பா.ஜ.க.,வுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ்கட்சி பெரும்பான்மை இடங்களில் வென்றுள்ளது. இது அந்த கட்சிக்கு கிடைத்த வெற்றியல்ல. மாறாக, பா.ஜ.க.,வில் நிலவிய உள்கட்சிப்பூசல் போன்ற காரணங்களுக்காக எங்கள் கட்சிக்கு எதிராக அளித்தவாக்குகள் காங்கிரஸýக்கு சாதகமாகியுள்ளது. எனினும், மக்கள்தீர்ப்பை ஏற்கிறோம்.

சட்டப்பேரவையில் எதிர்க் கட்சி வரிசையில் அமர்ந்து மக்கள்பணி செய்வோம். மக்கள் பிரச்னைகளுக்காக ஆக்கப்பூர்வமான எதிர்க் கட்சியாக செயல்படுவோம். கடந்த 5 ஆண்டு காலம் கர்நாடகத்தை ஆளும்வாய்ப்பை மக்கள் பாஜகவுக்கு அளித்திருந்தனர். அதற்காக மக்களை நன்றியோடு நினைத்துப்பார்க்கிறோம்.

ஆளும் கட்சியும், எதிர்க் கட்சியும் ஜனநாயகத்தில் முக்கியதூண்களாகும். அந்தவகையில், கர்நாடக சட்டப் பேரவையில் முக்கிய இடத்தை மக்கள் பா.ஜ.க.,வுக்கு அளித்துள்ளனர் என்றார் ஜெகதீஷ் ஷெட்டர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப் ...

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி நெகிழ்ச்சி 'வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்த ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் ப ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு வாஷிங்டன் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந் ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்தியா- தாய்லாந்து உறவு -பிரதமர் மோடி 'இந்தியாவும், தாய்லாந்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற இந்தியா – பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு தன்னிறைவு அடைந்து ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரச ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை – நிர்மலா சீதாராமன் ''பா.ஜ., ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற ...

மருத்துவ செய்திகள்

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.