தவறுகளை மறைத்து விட்டு காங்கிரஸ் முதலைக்கண்ணீர் வடிக்கிறது

 தவறுகளை மறைத்து விட்டு  காங்கிரஸ் முதலைக்கண்ணீர் வடிக்கிறது தங்களுடைய தவறுகளை மறைத்து விட்டு ஏழைகளின் மீது உண்மையிலேயே அக்கறை கொண்டுள்ளதை போன்று காங்கிரஸ் முதலைக்கண்ணீர் வடிக்கிறது என பாரதிய ஜனதா குற்றம் சுமத்தியுள்ளது.

கேரளத்தில் மே 18-ஆம் தேதி நடந்த பேரணியில் கலந்து கொண்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றவிடாமல் நாடாளுமன்றத்தை பா.ஜ.க., முடக்கிவிட்டது; ஏழைமக்களுக்கு எதிரான பா.ஜ.க.,வின் செயல்பாடு மிகுந்தவருத்தத்தை தருகிறது என்று பேசியிருந்தார்.

இது குறித்து பா.ஜ.க.,வின் செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் திருவனந்தபுரத்தில் திங்கள்கிழமை கூறியதாவது:

காங்கிரஸ் ஆட்சிசெய்யும் ஆந்திரத்துக்கு ராகுல்காந்தி ஏன் செல்லவில்லை. அங்கு ஊழல்காரணமாக மூன்று அமைச்சர்கள் பதவியை ராஜிநாமாசெய்துள்ளனர். மேலும் ஆறு அமைச்சர்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாடாளுமன்றத்தை பா.ஜ.க., முடக்குவதாக ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார். மத்திய அமைச்சர்கள் அஸ்வனிகுமார், பவன் குமார் பன்சால் ஆகியோர் பதவி விலகவேண்டும் என வலியுறுத்தி பா.ஜ.க., நாடாளுமன்றத்தை முடக்கியது. கடும் எதிர்ப்புக்குப்பிறகு அவர்கள் பதவி விலகியுள்ளனர். நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்தபோதே இதைச்செய்திருந்தால் அவை நடவடிக்கை பாதிக்கப் பட்டிருக்காது.

அரசுக்கேதிரான ஊழல் குற்றச்சாட்டு குறித்து கேள்விகேட்டால் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி ஆட்சி மெüனம் சாதிக்கிறது. ஆனால் உணவுப்பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றவிடமால் பாஜக தடுப்பதாக ராகுல் கூறுகிறார்.

தங்களுடைய தவறுகளை மறைத்து விட்டு ஏழைகளின் மீது உண்மையிலேயே அக்கறை கொண்டுள்ளதை போன்று காங்கிரஸ் முதலைக்கண்ணீர் வடிக்கிறது என்றார் நிர்மலா சீதாராமன்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...