ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கூட தமிழ் வழிக்கல்வி புறக்கணிக்கப்படவில்லை

 ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கூட தமிழ் வழிக்கல்வி புறக்கணிக்கப்படவில்லை தமிழகத்தில் இருக்கும் கலை, அறிவியல் கல்லூரிகளில் தேர்வுகளை ஆங்கிலத்தில்தான் எழுதவேண்டும் என்ற முடிவை தமிழக அரசு கைவிடவேண்டும். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கூட தமிழ் வழிக்கல்வி புறக்கணிக்கப்படவில்லை என பாஜக மாநிலத்தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை மேலும் கூறியிருப்பதாவது :

மதுரையில் தமிழ்த்தாய்க்கு சிலை அமைக்கப்படும் என்று பெருமையோடு அறிவித்தகையோடு, அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை அறிமுகப்படுத்தும் முயற்சியில் தமிழகஅரசு ஈடுபட்டுள்ளது. இது அரசின் இரட்டைநிலையை வெளிப்படுத்துகிறது.

எங்கும் தமிழ், எதிலும்தமிழ் என சொல்லிய திராவிடக்கட்சிகளின் 45 ஆண்டுகால ஆட்சியில் தமிழ்தெரியாத ஒரு தலைமுறையை உருவாகியுள்ளது. தமிழைவளர்ப்போம் என்று ஒருபுறம் சொல்லிக்கொண்டு மறுபுறம் ஆங்கில வழிக்கல்விக்கு வித்திடுவது கிராமப்புற மாணவர்களுக்கு பெரும்பின்னடைவை ஏற்படுத்தும்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கூட தமிழ் வழிக்கல்வி புறக்கணிக்கப்படவில்லை. சீனா, ஜப்பான் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் கூட தாய் மொழிக்கல்விக்குதான் முக்கியத்துவம் தரப்படுகிறது . இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டுமுதல் கல்லூரித் தேர்வுகளை ஆங்கிலத்தில் தான் எழுதவேண்டும் என்று மாநில உயர்கல்வி மன்றம் அரசுக்கு பரிந்துரைசெய்துள்ளது. இதனை தமிழக அரசு நிராகரித்து தமிழில் தேர்வு எழுத ஆவன செய்யவேண்டும் என பொன். ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...