இந்திய ஜனநாயகம் வம்சா வழி அடிப்படையிலானதா?

 இந்திய ஜனநாயகம் வம்சா வழி அடிப்படையிலானதா? காங்கிரஸ்கட்சி வம்சாவழி அரசியலை நடத்தி வருகிறது . இதன் மூலம் இந்திய ஜனநாயகம் வம்சா வழி அடிப்படையிலானதா? எனும் கேள்வி எழுகிறது பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவருமான அருண்ஜேட்லி குற்றம் சுமத்தியுள்ளார்.

ம.பி.,யில் நடந்த கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஜேட்லி மேலும் பேசியதாவது:

ஆட்சிப்பொறுப்பை ராகுல் காந்தியிடம் ஒப்படைப்பதற்க்கான முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுவருகிறது. இதன் மூலம் இந்திய ஜனநாயகம் வம்சா வழி அடிப்படையிலானதா? எனும் கேள்வி எழுகிறது. இந்த நேரத்தில், நாட்டை வழிநடத்தவேண்டியது ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை சேர்ந்த தலைவர்மட்டுமா, மாநிலங்களா அல்லது திறமையான ஒருவரா என்பதுகுறித்த விவாதத்தை தொடங்கி வைக்கவேண்டியது அவசியமாகிறது.

முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய், எல்கே. அத்வானி, நரேந்திரமோடி, சிவராஜ்சிங் சௌகான் மற்றும் ரமண்சிங் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் குடும்பப்பின்னணியின் அடிப்படையில் அல்லாமல் தங்களுடைய கடின உழைப்பின்மூலம் மட்டுமே உயர்ந்தார்கள். பிரதமர் மன்மோகன் சிறந்த நிர்வாகத்தை தரத்தவறி விட்டார். மாறாக, அவரது தலைமையிலான அரசு நமதுவரலாற்றில் இதுவரை இல்லாதவகையில் ஊழல் மலிந்த அரசாக மாறிவிட்டது.இதுவரை இல்லாத வகையில், முதன் முறையாக அரசின் செயல்பாடுகள் முடங்கிக்கிடக்கின்றன. இதனால் பொருளாதாரவளர்ச்சி 5 சதவீதமாக சரிந்துள்ளது. இது மிகவும் கவலை தருவதாக உள்ளது.

நாடுமுழுவதும் நக்சல்களை ஒடுக்கு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அரசு கூறிவரும் நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரேநாளில் நிகழ்ந்த தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டது அதிர்ச்சி தருகிறது .ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது, நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள நக்சல்களுக்கு எதிராக கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார். இவரது இந்தக்கருத்துக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் மற்றும் மணிசங்கர் அய்யர் உள்ளிட்டோர் எதிர்ப்புதெரிவித்தனர். நாட்டிலேயே நக்சல்களுக்கு எதிரான கடும் நடவடிக்கை எடுக்கும் அரசுஎன்றால் அது ரமண்சிங் தலைமையிலான சத்தீஸ்கர் அரசு மட்டுமே என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...