நிதிஷ் குமாரின் மத சார்பின்மை போலியானது

நிதிஷ் குமாரின் மத சார்பின்மை போலியானது பிகார் முதல்வர் நிதிஷ் குமாரின் மத சார்பின்மை போலியானது. பா.ஜ.க., தயவில் பதவிசுகத்தை அனுபவித்துவிட்டு. தற்போது திடீர் என்று மதச்சார்பின்மை பற்றி நிதிஷ் குமார் பேசுகிறார் என்று பிகார் மாநில பாஜக அமைச்சர் கிரிஜா சிங் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: வரும் நாடாளுமன்ற தேர்தலில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை பா.ஜ.க முன்னிறுத்துவது குறித்து நிதிஷ் குமார் பல கருத்துகளைக் கூறிவருகிறார். அவற்றுள் மோடி மதச் சார்புடையவர் என்பதும் ஒன்று.

இப்போது இந்தக்கருத்தை கூறும் நிதிஷ் குமார், 2002-ஆம் வருடம் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மத்திய ரயில்வே அமைச்சராக பதவிவகித்தார். மத சார்பின்மை குறித்து பேசும் அவர், அப்போது பா.ஜ.க தயவில் கிடைத்த அமைச்சர்பதவியை ராஜிநாமா செய்யாதது ஏன்?

பிகார் சட்டப் பேரவை தேர்தலில் பா.ஜ.க-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல்அறிக்கையை மனதில் வைத்தே மக்கள் வாக்களித்து இந்தக்கூட்டணியை வெற்றி பெறச்செய்தனர். நிதிஷ் குமாருக்காக மட்டும் யாரும் வாக்களிக்கவில்லை. இத்தனை காலம் பா.ஜ.க., தயவில் பதவிசுகத்தை அனுபவித்துவிட்டு. தற்போது திடீர் என்று மதச்சார்பின்மை பற்றி நிதிஷ் குமார் பேசுகிறார்.

சந்தர்ப்பவாத அரசியல்நடத்தும் நிதிஷ் குமாரின் மதச்சார்பின்மை போலியானது. பிகாரில் ஐ.ஜ., தளத்துக்கு அளித்துவரும் ஆதரவு குறித்து பா.ஜ.க இதுவரை எந்தமுடிவும் எடுக்கவில்லை. ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் முதல்வர் நிதிஷ் குமாரும் எடுக்கும் முடிவுகளை பொருத்து பா.ஜ.க தன்னுடைய நிலைப்பாட்டை அறிவிக்கும் என்றார் கிரிஜாசிங்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...