11 பேர் மீது குறி வைத்து இதில் 5 பேர் பலியாகி இருக்கிறார்கள். ஆடிட்டர் ரமேஷ்சின் கொலையுடன் இதற்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும்.என்று சென்னை சைதாப்பேட்டையில் மறியலில் ஈடுபட்டு கைதான பா.ஜ,க மூத்த தலைவர் இல.கணேசன் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது; பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங் களின் தூண்டுதலினால் தமிழ்நாட்டில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துவருகின்றன. எந்த மாநிலத்திலும் இல்லாதவகையில் டிசம்பர் 6–ந் தேதி தமிழகத்தில்மட்டும் பதட்டத்தை உருவாக்குகிறார்கள்.
பா.ஜ.க மற்றும் இந்து இயக்க தலைவர்கள் 11பேர் மீது குறிவைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது. இதில் 5பேர் பலியாகி உள்ளனர் . ஆடிட்டர் ரமேஷ் கொலையுடன் இதற்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும்.
மக்களின் உணர்வுகளை இன்று வெளிப்படுத்தி இருக்கிறோம். இந்தபோராட்டம் அரசுக்கு எதிரானதல்ல. கொந்தளிக்கும் உணர்வுகள் வேறுபாதையில் திரும்பிவிட கூடாது. எங்கள் கோரிக்கையை ஏற்று சிறப்பு விசாரணைகுழு அமைக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருப்பதும் 24 மணிநேரத்தில் கொலையாளியின் உருவப்படத்தின் மாதிரியை வெளியிட்டு இருப்பதும் ஆறுதல் தருகிறது . இதேவேகத்துடன் கடும் நடவடிக்கை எடுத்து இதுபோன்ற செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என்று அவர் கூறினார்.
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |
தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ... |
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.