ஆடிட்டர் ரமேஷ்சின் கொலையுடன் இதற்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும்

ஆடிட்டர் ரமேஷ்சின் கொலையுடன் இதற்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும் 11 பேர் மீது குறி வைத்து இதில் 5 பேர் பலியாகி இருக்கிறார்கள். ஆடிட்டர் ரமேஷ்சின் கொலையுடன் இதற்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும்.என்று சென்னை சைதாப்பேட்டையில் மறியலில் ஈடுபட்டு கைதான பா.ஜ,க மூத்த தலைவர் இல.கணேசன் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது; பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங் களின் தூண்டுதலினால் தமிழ்நாட்டில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துவருகின்றன. எந்த மாநிலத்திலும் இல்லாதவகையில் டிசம்பர் 6–ந் தேதி தமிழகத்தில்மட்டும் பதட்டத்தை உருவாக்குகிறார்கள்.

பா.ஜ.க மற்றும் இந்து இயக்க தலைவர்கள் 11பேர் மீது குறிவைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது. இதில் 5பேர் பலியாகி உள்ளனர் . ஆடிட்டர் ரமேஷ் கொலையுடன் இதற்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும்.

மக்களின் உணர்வுகளை இன்று வெளிப்படுத்தி இருக்கிறோம். இந்தபோராட்டம் அரசுக்கு எதிரானதல்ல. கொந்தளிக்கும் உணர்வுகள் வேறுபாதையில் திரும்பிவிட கூடாது. எங்கள் கோரிக்கையை ஏற்று சிறப்பு விசாரணைகுழு அமைக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருப்பதும் 24 மணிநேரத்தில் கொலையாளியின் உருவப்படத்தின் மாதிரியை வெளியிட்டு இருப்பதும் ஆறுதல் தருகிறது . இதேவேகத்துடன் கடும் நடவடிக்கை எடுத்து இதுபோன்ற செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப� ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு ...

சமூகநீதி எப்படி சாத்தியமாகும்

சமூகநீதி எப்படி சாத்தியமாகும் திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி. ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி தமிழகத்தின் கொங்கு பகுதியில் பெருகி வரும் கொலை, கொள்ளை ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவ ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம் ''கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற� ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி; இந்தியாவில் குறைந்தது நக்சல் வன்முறை இல்லாத இந்தியாவை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில், ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...