ஆடிட்டர் ரமேஷ்சின் கொலையுடன் இதற்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும்

ஆடிட்டர் ரமேஷ்சின் கொலையுடன் இதற்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும் 11 பேர் மீது குறி வைத்து இதில் 5 பேர் பலியாகி இருக்கிறார்கள். ஆடிட்டர் ரமேஷ்சின் கொலையுடன் இதற்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும்.என்று சென்னை சைதாப்பேட்டையில் மறியலில் ஈடுபட்டு கைதான பா.ஜ,க மூத்த தலைவர் இல.கணேசன் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது; பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங் களின் தூண்டுதலினால் தமிழ்நாட்டில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துவருகின்றன. எந்த மாநிலத்திலும் இல்லாதவகையில் டிசம்பர் 6–ந் தேதி தமிழகத்தில்மட்டும் பதட்டத்தை உருவாக்குகிறார்கள்.

பா.ஜ.க மற்றும் இந்து இயக்க தலைவர்கள் 11பேர் மீது குறிவைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது. இதில் 5பேர் பலியாகி உள்ளனர் . ஆடிட்டர் ரமேஷ் கொலையுடன் இதற்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும்.

மக்களின் உணர்வுகளை இன்று வெளிப்படுத்தி இருக்கிறோம். இந்தபோராட்டம் அரசுக்கு எதிரானதல்ல. கொந்தளிக்கும் உணர்வுகள் வேறுபாதையில் திரும்பிவிட கூடாது. எங்கள் கோரிக்கையை ஏற்று சிறப்பு விசாரணைகுழு அமைக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருப்பதும் 24 மணிநேரத்தில் கொலையாளியின் உருவப்படத்தின் மாதிரியை வெளியிட்டு இருப்பதும் ஆறுதல் தருகிறது . இதேவேகத்துடன் கடும் நடவடிக்கை எடுத்து இதுபோன்ற செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...