மதவாத, தீவிரவாத அமைப்புகளை ஆதரிக்கும் போக்கை காங்கிரஸ் கடைப்பிடிக்கிறது

 பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:– மத்தியில் ஆளும்காங்கிரஸ் அரசு மதவாத அமைப்புகள், பயங்கரவாதசெயல்களில் ஈடுபட்டாலோ, பாகிஸ்தான்

தீவிரவாதிகளுடன் தொடர்புவைத்திருந்தாலோ அதை கண்டுகொள்ளாமல் மெத்தனப் போக்கை கடைபிடித்தது ஒரு காலம். அதன்பிறகு தீவிரவாதிகள் மீது மென்மையானபோக்கை கடைப்பிடித்தது. இதுவே காங்கிரசின் வீழ்ச்சிக்கு காரணம்.

இப்போது மதவாத, தீவிரவாத அமைப்புகளை ஆதரிக்கும்போக்கை கடைப்பிடிக்கிறது. உதாரணமாக பாகிஸ்தானில் உருவான இந்தியமுஜாகிதீன் அமைப்புக்கு காங்கிரஸ் வக்காலத்து வாங்குகிறது.

குஜராத்தில் நரேந்திரமோடியை கொல்லவந்த தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சிபிஐ. மூலம் அடையாலம் காட்டப்பட்ட ஒரு இளம்பெண் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டார். இப்போது அதையே போலிஎன்கவுண்டர் என சொல்லி பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது .

பா.ஜ.க.,வை பொறுத்தவரை எப்போதுமே வளர்ச்சி திட்டங்களைத்தான் சொல்லிவருகிறது. ஆனால் காங்கிரஸ் வாக்குவங்கிகளை நினைத்து செயல்படுகிறது.

இந்து இயக்கங்களைசேர்ந்த தலைவர்கள் 1982 முதல் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டும், தாக்குதலுக்குள்ளாகியும் இருக்கிறார்கள். சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டதை கண்டித்து பா.ஜ.க விடுத்த வேண்டுகோளை ஏற்று கடையடைப்பு போராட்டத்துக்கு ஒத்துழைப்புநல்கிய வியாபாரிகள், பொதுமக்கள் கண்டன அறிக்கைகள் வெளியிட்ட அரசியல்கட்சிகளின் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறோம்.

ரமேஷ்படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்ததோடு விசேஷபுலனாய்வு குழுவை அமைத்து உடனடியாக விசாரணைதொடங்க உத்தரவிட்ட முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் நடவடிக்கை ஆறுதல்தருகிறது. உண்மையான குற்றவாளிகளும். அதன் பின்னணியும் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை பெறும் வரை எங்கள்போராட்டம் தொடரும்.

ஆடிட்டர் ரமேஷ் கொலைதொடர்பாக விசாரித்து கட்சி மேலிடத்துக்கு அறிக்கை கொடுப்பதற்காக பா.ஜ.க.,வின் அகில இந்திய செய்திதொடர்பாளர்கள் பிரகாஷ் கவுடேகர், நிர்மலா சீதாராமன் மற்றும் ஹெக்டே எம்.பி. உள்ளிட்ட 3 பேர்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தகுழுவினர் 25 மற்றும் 26ந் தேதிகளில் கோவை, வேலூர், சேலம், சென்னை உள்ளிட்ட இடங்களில் நேரடியாக விசாரணை நடத்துகிறார்கள்.

வருகிற 1–ம் தேதி சேலத்தில் நடைபெறும் இரங்கல்கூட்டத்தில் அத்வானி கலந்து கொள்கிறா என்றார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்த� ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் … கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்க ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம் பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பி ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை � ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது 'கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலை� ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ...

மருத்துவ செய்திகள்

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.