கட்சியினருக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் குறித்து திங்கள்கிழமை முழு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்

  கட்சியினருக்கு இருக்கும்  அச்சுறுத்தல்கள் குறித்து திங்கள்கிழமை முழு அறிக்கை  சமர்ப்பிக்கப்படும் தமிழகத்தில் சமீபகாலமாக இந்து அமைப்புகளின் பிரமுகர்கள் தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. என்று பாஜக. செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கருத்து தெரிவித்துள்ளார்.

சேலத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, தமிழகத்தில் நிலவும் சூழல்குறித்த உண்மை நிலையை கண்டறிய, அக்கட்சியின் அகில இந்திய செய்தித்தொடர்பாளர்கள் பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற உறுப்பினர் அனந்த குமார் ஹெக்டே அடங்கிய மத்திய மூவர்குழு அமைக்கப்பட்டது.

அந்த குழுவினர் புதன்கிழமை கோவைவந்தனர். தங்கள் வருகை குறித்து பாஜக. செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறியது:

÷தமிழகத்தில் சமீபகாலமாக இந்து அமைப்புகளின் பிரமுகர்கள் தாக்கப் படுவதும், கொலை செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. பாஜக. மாநில பொதுச்செயலாளர் ரமேஷ் கடந்தவாரம் கொலை செய்யப்பட்டுள்ளார்.

÷இச்சம்பவம் குறித்தும், கடந்த சிலமாதங்களில் இங்குள்ள பாஜக. மற்றும் சங்கபரிவார் அமைப்புகளின் இந்து இயக்க தலைவர்கள், நிர்வாகிகள் மீதான தாக்குதல், கொலைச்சம்பவங்கள், வழக்குகள் குறித்தும் விசாரித்து அறிக்கை அளிக்க, பாஜக.வின் தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங் இக்குழுவை அமைத்துள்ளார்.

÷சென்னை, சேலம், கோவை, வேலூர் ஆகிய இடங்களில் ஏற்பாடுசெய்யப் பட்டுள்ள மையங்களில், கட்சியினருக்கு இருக்கும் பாதிப்புகள், அச்சுறுத்தல்கள், பிரச்னைகள்குறித்து விசாரித்து, அவற்றை இங்குள்ள தலைவர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, திங்கள்கிழமை முழுஅறிக்கை கட்சித் தலைமையிடம் சமர்ப்பிக்கப்படும். பிறகு அவை அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்படும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...