பா.ஜ.க.,வின் பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி அதிகாரபூர்வமாக அறிவிப்பு

 டெல்லியில் பா.ஜ.க.,வின் தலைமையகத்தில் நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் வரும் 2014ம் ஆண்டுக்கான பா.ஜ.க.,வின் பிரதமர்வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டார்.

ஆட்சி மன்றக் குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் ராஜ்நாத்சிங், ”பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக.வின் பிரதமர் வேட்பாளராக மோடி நிறுத்தப்படுவார்” என்றார்.

இந்த அறிவிப்பையடுத்து நரேந்திரமோடிக்கு ராஜ்நாத்சிங், பாஜக முன்னாள் தலைவர் நிதின் கட்காரி, மூத்த தலைவர்கள் அருண்ஜேட்லி, வெங்கைய்யா நாயுடு, அனந்த்குமார், சுஷ்மா ஸ்வராஜ், முரளி மனோகர்ஜோஷி ஆகியோர் மலர்ச்செண்டு கொடுத்து வாழ்த்துத்தெரிவித்தனர். அப்போது ஜோஷியின் காலில்விழுந்து மோடி ஆசிபெற்றார்.

பார்லி., குழுகூட்டம் நடக்கும் கட்சியின் தலைமை அலுவலக வளாகத்தில் பா.ஜ.க., மற்றும் ஆர்எஸ்எஸ்., தொண்டர்கள் கூட்டம், கூட்டமாககூடி நின்றனர். மோடி அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து மேள, தாளங்கள் இசைத்து , பட்டாசுகளை வெடித்து கர கோஷங்கள் எழுப்பி உற்சாககமாக தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...