அனைத்து துறைகளிலும், மாற்று திறனாளிகளுக்கு, 3 சதவீத இடஒதுக்கீடு அளிக்கவேண்டும்

 மத்திய, மாநிலஅரசுகள், அனைத்து துறைகளிலும், மாற்று திறனாளிகளுக்கு, 3 சதவீத இடஒதுக்கீடு அளிக்கவேண்டும்; மூன்று மாதங்களுக்குள், இதை நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

அரசு துறைகளில், வேலை வாய்ப்பு வழங்கும்படி, மாற்றுத்திறனாளிகள், நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி, பி.சதாசிவம் தலைமையிலான, “பெஞ்ச்’ முன், விசாரணைக்குவந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அரசுத்துறைகளில் ஒதுக்கீடு, 50 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கக்கூடாது என்பது, பொதுவானவிதியாக இருப்பதால், அதை காரணம் கூறி, மாற்று திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டை நிராகரிக்ககூடாது. அரசின் அனைத்து துறைகள், நிறுவனங்கள், கல்விநிலையங்கள் ஆகியவற்றில், மாற்று திறனாளிகளுக்கு, 3 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும். மூன்று மாதங்களுக்குள், இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும். போதியவேலைவாய்ப்புகள் கிடைக்காததால், மாற்றுத் திறனாளிகள், வறுமையில் வாடுகின்றனர். அவர்களின் உரிமைகளை, மத்திய, மாநில அரசுகள், பாதுகாக்கவேண்டும். ஒவ்வொரு துறையிலும், எத்தனை காலியிடங்கள் உள்ளன என்பதை கணக்கிடும்படி, சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிளுக்கு உத்தரவிட்டு, மூன்று சதவீத ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த, நடவடிக்கை எடுக்கவேண்டும். என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...