விஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும்

 தசமி என்றால் பத்து. விஜயம்_ என்றால் வெற்றி, வாகை, வருகை என பலபொருள்கள் உண்டு. இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞான சக்தி என்று மூன்றுசக்தி அவதாரங்கள் எடுத்த அன்னை இறுதியில் எல்லாம்கலந்த மகா சக்தியாகத் தோன்றி, மகிஷாசுரனை, சும்ப, நிசும்பனை , சண்டமுண்டனை வதம்செய்த நன்னாள் விஜய தசமி. அந்நாளில் ஸ்ரீ அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும்பெருகும். வாழ்வில் எல்லா வளங்களும் கிடைக்கும்.

 

ஸ்ரீதுர்கா தேவி

விஜய தசமி என்பதற்கு மற்றொருபொருளும் உண்டு. நவராத்திரியின் ஒன்பதுநாளும் விரதமிருந்து தூய்மையான உள்ளத்துடனும், பக்தியுடனும் வழிபட்டவர்கள் இல்லம்தேடி, பத்தாம் நாளான தசமியன்று ஸ்ரீ அன்னை விஜயம்செய்யும் நாளே ‘விஜய தசமி’ என்றும் கூறப்படுகிறது. அன்று ஸ்ரீ அன்னையே நம் இல்லம்தேடி வருகிறாள் என்பதே இந்நாளின் மிகப்பெரிய சிறப்பு.

அன்று தான் ராவணா சுரனை ஸ்ரீராமன் வதம்செய்தான். பாண்டவர்கள் தங்களது போரின் வெற்றிக்கு நன்றிகூறும் விதமாக அன்னை எனும் மகாசக்திக்கு, தாங்கள்போரிட்ட ஆயுதங்களை முன்வைத்து வழிபாடு செய்தநன்னாளும் இதுவே!

இப்படிப் பல்வேறு சிறப்புகளை உடைய இந்நன்னாள் மற்றொரு விதத்திலும் மிகுந்த சிறப்பு பெற்றதாகிறது. ஆம், இந்நன்னாளில் தான் மகாஅவதார புருடர் ஸ்ரீ ஷிர்டி சாயிபாபா மகாசமாதி அடைந்தார். அது மட்டுமல்ல ஸ்ரீகுழந்தையானந்த சுவாமிகள் ஜீவசமாதி கொண்டதினமும் இதுவே!

 

 Tags; dasara, vijayadashami, தசரா பண்டிகை வரலாறு,துர்கா தேவி, நவராத்திரி, நவராத்திரி நோன்பு, விஜய தசமி,விஜயதசமி, விஜயதசமி அன்று, விஜயதசமி என்றால் என்ன

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நித ...

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது- அர்ஜுன் ராம் மேக்வால் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுமையாக ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையு ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் பாஜக அக்கறை- கிரண் ரிஜிஜூ மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்ட வீடியோவை ஒன்றிய ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடை ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடைவுக்கு காரணம் தமிழக அரசுதான் – அஸ்வின் வைஷ்ணவ் தமிழகத்​தில் நிலம் கையகப்​படுத்​து​வ​தில் நில​வும் தாமதத்​தால் தான் பல ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் க ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் கூடாது: பிரதமா் மோடி அறிவுரை கைப்பேசி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி அறிவித்தார் பிரதமர் மோடி 'செஷல்ஸ் வளர்ச்சிக்காக 1,575 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத் ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத்தி 197 லட்சம் டன்னாக அதிகரிப்பு இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய மீன் உற்பத்தியாளராகவும், ...

மருத்துவ செய்திகள்

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...