நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு பிரதமர் பொறுப்பேற்கத்தான் வேண்டும்

 நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுதொடர்பாக சி.பி.ஐ மேற்கொண்டுவரும் விசாரணையில் இருந்து பிரதமர் மன்மோகனசிங்கை மட்டும் ஒதுக்கிவிட முடியாது. அமைச்சகத்தின் முறையான அதிகாரம்பெற்று இருந்தவர் என்பதால் அவர் இதற்கு பொறுப்பேற்கத் தான் வேண்டும் என பாஜக தலைவர் அருண்ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளார்.

தொழிலதிபர் குமார்மங்கலம் பிர்லா, முன்னாள் நிலக்கரித்துறை செயலர் பி.சி. பரேக் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளதன் மூலம், முதலீட்டாளர்களும், அரசு அதிகாரிகள் மட்டுமே முறைகேடுகள்தொடர்பாக விசாரணைக்கு உள்படுத்தப்படுவார்கள், பொறுப்பில் உள்ளவர்கள் ( நிலக்கரி துறையை தன்வசம் வைத்திருந்த பிரதமர் மன்மோகன் சிங்) சுதந்திரமாக செல்ல அனுமதிக்கப்படுவர் என்ற ஓர்தவறான சமிக்ஞை அனுப்பப்பட்டுள்ளது.

அலைக் கற்றை,நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுபோன்ற ஊழல்கள் ஐ.மு. கூட்டணி அரசின் சாயத்தை வெளுக்க வைத்து விட்டன. இந்த ஊழல் (நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு) உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் மோசமான ஒருசமிக்ஞையை அனுப்பப் போகிறது.

சுரங்க ஒதுக்கீட்டை பரிந்துரைசெய்யும் ஓர் அரசு செயலர் மீது சி.பி.ஐ.,யால் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது; ஆனால், அதை அமல்படுத்த உத்தரவிடும் அமைச்சர் விசாரணை வளையத்திற்குள் சேர்க்கப்படாதது ஏன்என்று புரியவில்லை.

பி.சி. பரேக், பரிந்துரைசெய்யும் அதிகாரம்மட்டுமே படைத்தவர். ஆனால், அதை அமல்படுத்தும் அதிகாரம்படைத்த அமைச்சர் (பிரதமர் மன்மோகன்சிங்) விசாரணைக்கு உள்பட்டே ஆகவேண்டும் குமார் மங்கலம் பிர்லா ஓர் அனுபவமிக்க தொழிலதிபர் , பி.சி. பரேக் ஒருநேர்மையான அரசு அதிகாரி. இவர்கள் இருவர்மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளதன் மூலம் தவறான சமிக்ஞைகள் அனுப்பப்படுகின்றன.

முதலாவது, இந்தியாவில் முதலீடுசெய்யும் முதலீட்டாளர்களின் திட்டங்கள், எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் புலன்விசாரணை அமைப்புகளால் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டு, நிறுவனத்தின் தலைவர்மீது குற்ற வழக்கு பதிவுசெய்யப்படும்.

இரண்டாவது, அரசு அதிகாரிகள்மட்டுமே முறைகேடுகளுக்கு பொறுப்பேற்க வேண்டியிருக்கும், அரசியல்வாதிகள் இதற்கு பொறுப்பேற்க மாட்டார்கள் .இதன் ஒட்டுமொத்த விளைவு வெளிநாட்டுமுதலீடுகள் குறைந்து போவதோடு, உள்நாட்டு முதலீட்டாளர்களும் வெளிநாடுகளை நோக்கிச் சென்று விடுவார்கள். இது முதலீடுகளுக்கு உகந்தசூழல் அல்ல என்றார் ஜேட்லி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...