துன்பங்களை, கஷ்டங்களை பொருத்துக் கொண்டால் மகிழ்ச்சி கிடைக்கும்

 ஒரு ஊரில் ஒருசிற்பி இருந்தான். ஒருநாள் அவனிடம் அந்த ஊர்மக்கள், ' ஒரு கோயில் கட்டுகிறோம். சாமிசிலை ஒன்றை செதுக்கி தாருங்கள்' என்றுகேட்டனர். சிற்பி சரி என்று அருகில் இருந்த மலையில் இரண்டுகற்களை கொண்டு வந்தான். ஒருகல்லை சாமி சிலையாகவும், இன்னொரு கல்லை வாசலில் படிகல்லாகவும் செய்து முடித்தான். கோயில்கட்டி முடிவடைந்தது.

ஒரு நள்ளிரவில் யாரோ அழுவதுகேட்ட சாமிக்கல், ' யாரது அழுவது' என கேட்டது. உடனே வாசலில் இருந்த படிக்கல், ' நான்தான் அழுகிறேன்' என்றது. சாமிக்கல் அதற்கான காரணத்தைகேக்க, அதற்கு படிக்கல் கூறியது, ' நாம் இருவரும் ஒரேமலையில் தான் பிறந்தோம்..ஒரேசிற்பி தான் நம் இருவரையும் செத்துக்கினான். ஆனால், உன்னை மட்டும் சாமி சிலையாகிசெய்து கற்ப கிரகத்தில் வைத்துள்ளான். என்னை படிக்கல்லாக வெளியே வைத்து விட்டான். உன்னை அனைவரும் கைஎடுத்து வணங்குகின்றனர். ஆனால், என்னை ஏறிமிதிக்கின்றனர். இது என்ன அநியாயம்..?' என புலம்பியது படிக்கல்.

அதற்கு உள்ளே இருந்தசாமிக்கல் ' உன் நிலைக்கு நீயேதான் காரணம். உன்னை சிற்பி செதுக்க உளியை உன்மீது அடித்தார். நீ வலியை தாங்கமுடியாமல் கதறினாய். உன்மீது எங்கு உளிபட்டாலும் உன்னால் அந்தவலியை தாங்க முடியவில்லை. நீ சிற்பிக்கு ஒத்துழைக்கவில்லை. ஆகையால் சலிப்படைந்த சிற்பி, உன்னை படிக்கல்லாக வெளியேவைத்தான். என் மீது உளியை வைத்து அடிக்கும்போது அந்த வலியை நான் பொருத்து கொண்டேன்..தலை, கை, கால் என எல்லாபகுதியை அவன் செதுக்கும் போதும் நான் வலியை பொருத்துக் கொண்டேன். ஆகையால் நான் ஒருசிலையாக உருப்பெற்றேன். நான் வலியை தாங்கியதால் என்னை அனைவரும் வணங்குகின்றனர். நீ வலியை தாங்காததால், உன்னை மிதிக்கின்றனர்' என கூறிய உடன்தான் படிக்கல்லிற்கு தன் தவறு புரிந்தது.

உண்மை தானே…நம்வாழ்வில் ஏற்படும் துன்பங்களையும் கஷ்டங்களையும் யார் பொருத்துக் கொள்கிறார்களோ, அவர்களே எதிர் காலத்தில் நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிக்கமுடியும்..

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில� ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர� ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் � ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம� ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...