துன்பங்களை, கஷ்டங்களை பொருத்துக் கொண்டால் மகிழ்ச்சி கிடைக்கும்

 ஒரு ஊரில் ஒருசிற்பி இருந்தான். ஒருநாள் அவனிடம் அந்த ஊர்மக்கள், ' ஒரு கோயில் கட்டுகிறோம். சாமிசிலை ஒன்றை செதுக்கி தாருங்கள்' என்றுகேட்டனர். சிற்பி சரி என்று அருகில் இருந்த மலையில் இரண்டுகற்களை கொண்டு வந்தான். ஒருகல்லை சாமி சிலையாகவும், இன்னொரு கல்லை வாசலில் படிகல்லாகவும் செய்து முடித்தான். கோயில்கட்டி முடிவடைந்தது.

ஒரு நள்ளிரவில் யாரோ அழுவதுகேட்ட சாமிக்கல், ' யாரது அழுவது' என கேட்டது. உடனே வாசலில் இருந்த படிக்கல், ' நான்தான் அழுகிறேன்' என்றது. சாமிக்கல் அதற்கான காரணத்தைகேக்க, அதற்கு படிக்கல் கூறியது, ' நாம் இருவரும் ஒரேமலையில் தான் பிறந்தோம்..ஒரேசிற்பி தான் நம் இருவரையும் செத்துக்கினான். ஆனால், உன்னை மட்டும் சாமி சிலையாகிசெய்து கற்ப கிரகத்தில் வைத்துள்ளான். என்னை படிக்கல்லாக வெளியே வைத்து விட்டான். உன்னை அனைவரும் கைஎடுத்து வணங்குகின்றனர். ஆனால், என்னை ஏறிமிதிக்கின்றனர். இது என்ன அநியாயம்..?' என புலம்பியது படிக்கல்.

அதற்கு உள்ளே இருந்தசாமிக்கல் ' உன் நிலைக்கு நீயேதான் காரணம். உன்னை சிற்பி செதுக்க உளியை உன்மீது அடித்தார். நீ வலியை தாங்கமுடியாமல் கதறினாய். உன்மீது எங்கு உளிபட்டாலும் உன்னால் அந்தவலியை தாங்க முடியவில்லை. நீ சிற்பிக்கு ஒத்துழைக்கவில்லை. ஆகையால் சலிப்படைந்த சிற்பி, உன்னை படிக்கல்லாக வெளியேவைத்தான். என் மீது உளியை வைத்து அடிக்கும்போது அந்த வலியை நான் பொருத்து கொண்டேன்..தலை, கை, கால் என எல்லாபகுதியை அவன் செதுக்கும் போதும் நான் வலியை பொருத்துக் கொண்டேன். ஆகையால் நான் ஒருசிலையாக உருப்பெற்றேன். நான் வலியை தாங்கியதால் என்னை அனைவரும் வணங்குகின்றனர். நீ வலியை தாங்காததால், உன்னை மிதிக்கின்றனர்' என கூறிய உடன்தான் படிக்கல்லிற்கு தன் தவறு புரிந்தது.

உண்மை தானே…நம்வாழ்வில் ஏற்படும் துன்பங்களையும் கஷ்டங்களையும் யார் பொருத்துக் கொள்கிறார்களோ, அவர்களே எதிர் காலத்தில் நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிக்கமுடியும்..

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குங்குமப்பூ விவசாயம் செய்யும் ...

குங்குமப்பூ விவசாயம் செய்யும் இளைஞரை பாராட்டிய பிரதமர் மோடி கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி-யை அடுத்த மலவயல் ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத் ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த பச்சைக்கொடி பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் த ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் மோடியை, டில்லியில் உள்ள ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படை ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படைகளுக்கு முழு சுதந்திரம் – பிரதமர் மோடி உறுதி ல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தருவதற்கான உயர்மட்ட ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அ ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அரசு – பிரதமர் மோடி பெருமிதம் நாட்டின் எதிர்காலத்திற்கு இளைஞர்களை தயார்படுத்த கல்வி முக்கிய பங்காற்றுகிறது. ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து கனடா பார்லிமென்ட்டிற்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...