துன்பங்களை, கஷ்டங்களை பொருத்துக் கொண்டால் மகிழ்ச்சி கிடைக்கும்

 ஒரு ஊரில் ஒருசிற்பி இருந்தான். ஒருநாள் அவனிடம் அந்த ஊர்மக்கள், ' ஒரு கோயில் கட்டுகிறோம். சாமிசிலை ஒன்றை செதுக்கி தாருங்கள்' என்றுகேட்டனர். சிற்பி சரி என்று அருகில் இருந்த மலையில் இரண்டுகற்களை கொண்டு வந்தான். ஒருகல்லை சாமி சிலையாகவும், இன்னொரு கல்லை வாசலில் படிகல்லாகவும் செய்து முடித்தான். கோயில்கட்டி முடிவடைந்தது.

ஒரு நள்ளிரவில் யாரோ அழுவதுகேட்ட சாமிக்கல், ' யாரது அழுவது' என கேட்டது. உடனே வாசலில் இருந்த படிக்கல், ' நான்தான் அழுகிறேன்' என்றது. சாமிக்கல் அதற்கான காரணத்தைகேக்க, அதற்கு படிக்கல் கூறியது, ' நாம் இருவரும் ஒரேமலையில் தான் பிறந்தோம்..ஒரேசிற்பி தான் நம் இருவரையும் செத்துக்கினான். ஆனால், உன்னை மட்டும் சாமி சிலையாகிசெய்து கற்ப கிரகத்தில் வைத்துள்ளான். என்னை படிக்கல்லாக வெளியே வைத்து விட்டான். உன்னை அனைவரும் கைஎடுத்து வணங்குகின்றனர். ஆனால், என்னை ஏறிமிதிக்கின்றனர். இது என்ன அநியாயம்..?' என புலம்பியது படிக்கல்.

அதற்கு உள்ளே இருந்தசாமிக்கல் ' உன் நிலைக்கு நீயேதான் காரணம். உன்னை சிற்பி செதுக்க உளியை உன்மீது அடித்தார். நீ வலியை தாங்கமுடியாமல் கதறினாய். உன்மீது எங்கு உளிபட்டாலும் உன்னால் அந்தவலியை தாங்க முடியவில்லை. நீ சிற்பிக்கு ஒத்துழைக்கவில்லை. ஆகையால் சலிப்படைந்த சிற்பி, உன்னை படிக்கல்லாக வெளியேவைத்தான். என் மீது உளியை வைத்து அடிக்கும்போது அந்த வலியை நான் பொருத்து கொண்டேன்..தலை, கை, கால் என எல்லாபகுதியை அவன் செதுக்கும் போதும் நான் வலியை பொருத்துக் கொண்டேன். ஆகையால் நான் ஒருசிலையாக உருப்பெற்றேன். நான் வலியை தாங்கியதால் என்னை அனைவரும் வணங்குகின்றனர். நீ வலியை தாங்காததால், உன்னை மிதிக்கின்றனர்' என கூறிய உடன்தான் படிக்கல்லிற்கு தன் தவறு புரிந்தது.

உண்மை தானே…நம்வாழ்வில் ஏற்படும் துன்பங்களையும் கஷ்டங்களையும் யார் பொருத்துக் கொள்கிறார்களோ, அவர்களே எதிர் காலத்தில் நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிக்கமுடியும்..

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் கட்சித் தொண்டன். இவா்தான் ...

நான் கட்சித் தொண்டன். இவா்தான் என்  தலைவா் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் 1980-ஆம் ஆண்டு, ஜனதா ...

தேசியஜனநாயக கூட்டணியில் மீண்ட ...

தேசியஜனநாயக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரன் அதிமுக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரனின் ...

ஆளுநர் சாமர்த்தியமாக தப்பித்த ...

ஆளுநர் சாமர்த்தியமாக தப்பித்துவிட்டார் சட்டசபையில் ஜெயலலிதா அவர்களின் புடவையை கிழிக்க முயன்றார்களே அன்று, ...

நேட்டோ உடைகிறது.. டிரம்ப்பின் ஆ ...

நேட்டோ உடைகிறது.. டிரம்ப்பின் ஆணவத்தால்.. நசுங்கும் அமெரிக்கா? அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், டென்மார்க்கிடமிருந்து கிரீன்லாந்தைக் கைப்பற்றும் ...

டாலருக்கு எதிரான சர்வதேச நிகழ் ...

டாலருக்கு எதிரான சர்வதேச நிகழ்வுகள் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் சரிவு குறித்து மட்டும் ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

மருத்துவ செய்திகள்

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...