மன்மோகன்சிங் கூறியிருப்பது நகைப்புக் குரியது

 நரேந்திரமோடி பிரதமரானால் நாட்டுக்கு பேரழி என கூறியுள்ள பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் கடும்கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முதலாக பத்திரிகையாளர்களை பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்தார். அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு மன்மோகன்சிங் பதில் அளித்தார். அப்போது

பாஜக பிரதமர் வேட்பாளராக குஜராத் மாநில முதல்வர் நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த மன்மோகன்சிங், நாட்டின் பிரதமராக நரேந்திரமோடி பதவி ஏற்றால் பேரழிவு ஏற்படும். அவர் முதல்வராக இருக்கும் குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட மதக் கலவரத்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இதனால் நாட்டின்மதிப்பு குறைந்தது என்றார்.

பிரதமரின் இந்தபதிலுக்கு பாஜக அகில இந்திய தலைவர் ராஜ்நாத்சிங் கடும்கண்டனம் தெரிவித்துள்ளார். சிறப்பு புலனாய்வுகுழு விசாரணையிலும் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கிலும் நரேந்திரமோடி குற்றமற்றவர் என்று தீர்ப்புகூறப்பட்டுள்ளது. அப்படியிருக்க மன்மோகன்சிங் அவ்வாறு கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.

குஜராத் மாநிலத்தில் கலவரம் நடந்த போது மன்மோகன்சிங் பிரதமராக இல்லை. மத்தியில் இரட்டை ஆட்சி முறைக்கு வழி ஏற்படுத்திகொடுத்தவரே மன்மோகன் சிங்தான். அதனால் தான் பிரதமரால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. பிரதமரின் இந்தபேட்டி, மத்தியில் பாஜக விரைவில் ஆட்சிக்குவரும் என்பது உறுதி. மேலும் அடுத்து மத்தியில் ஐ,மு,,கூட்டணி ஆட்சிக்குவராது என்று பிரதமரே கூறியுள்ளார்.

அதனால் தான் மூன்றாம் முறையாக பிரதமராக பதவி ஏற்கமாட்டேன் என்று அவர் கூறியுள்ளார். மோடி ஆட்சியில் குஜராத் மாநிலம் பெரும்வளர்ச்சியை கண்டுள்ளது. நாட்டிலேயே ஒரு முன் மாதிரியான மாநிலமாக திகழ்கிறது. அப்படியிருக்கையில் மன்மோகன்சிங் கூறியிருப்பது நகைப்புக் குரியது என்று ராஜ்நாத்சிங் கூறினார்.

நாட்டில் வேலை வாய்ப்பை பெருக்க முடியவில்லை என்றும் விலைவாசி உயர்வை குறைக்கமுடியவில்லை என்றும் ஊழலை ஒழிக்க முடியவில்லை என்றும் மன்மோகன்சிங்கே ஒப்புக் கொண்டுள்ளார். ஏறக்குறைய 3 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முதலாக பேட்டி அளித்து மன்மோகன்சிங், அவருடைய சாதனைகளை பட்டியலிட்டுக் கூறாமல்,தோல்வி ஏற்பட்டதை கூறியுள்ளார். இதிலிருந்து மத்தியில் ஐக்கியமுற்போக்கு கூட்டணி அரசு பதவி ஏற்றதில் இருந்து நாட்டின் அனைத்து துறைகளின் செயல்பாடுகளில் தோல்வி ஏற்பட்டுள்ளதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார் என்று ராஜ்நாத் சிங் மேலும் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...