லோக் சபா தேர்தலுக்கான கூட்டணிதொடர்பாக கொங்குநாடு மக்கள் கழகத்துடன் நேற்று பாஜக பேச்சுவார்த்தை நடத்தியது . ம.தி.மு.க.,வுடன் வரும் 23-ந்தேதி அதிகாரப் பூர்வ பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
லோக்சபா தேர்தலில் பா.ஜ.க.,வுடன் கூட்டணி அமைப்பதுகுறித்து பேச்சுவார்த்தை நடைபெறுவதாக ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ அறிவித்திருந்தார். மேலும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஐவர் குழுவை வைகோ அமைத்தும் இருந்தார். இந்தகுழு வருகிற 23-ந்தேதி பாரதிய ஜனதா தலைவர்களுடன் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்துகிறது.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் முதல்கட்டமாக மதிமுக. மற்றும் கொங்குநாடு மக்கள் கழகத்துடன் பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறோம். பாமக., தேமுதிக. ஆகிய கட்சிகளும் எங்கள் அணியில் இணையும் என்றார்.
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.