இலங்கை பிரச்சனை சுஷ்மாவை சந்தித்த எஸ்.எம்.கிருஷ்ணா

டெல்லி: தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் தொடர் தாக்குதல் விவகாரம் குறித்து லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக முன்னணித் தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜை நேரில்சந்தித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா விளக்கம் அளித்துள்ளார்.

நேற்று சுஷ்மா சுவராஜின் வீட்டுக்கு எஸ்.எம்.கிருஷ்ணா சென்றார். சுஷ்மாவிடம் தமிழக மீனவர் பிரச்சினை உள்ளிட்ட 5

முக்கியப் பிரச்சினைகள் குறித்து மத்திய அரசின் நடவடிக்கை குறித்து விளக்கினார்.

சமீபத்தில் தமிழக மீனவர் பிரச்சினையை ஐ.நா. சபைக்குக் கொண்டு போகப் போவதாக பாஜக தலைவர் நிதின் கத்காரி சென்னையில் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் சுஷ்மாவை கிருஷ்ணா நேரில் சந்தித்து விளக்கம் தெரிவித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதுகுறித்து சுஷ்மா சுவராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் போது அவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்வது, இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு நிவாரண பணிகள், அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் கால்களில் கண்காணிப்பு கருவி மாட்டிய விவகாரம், எகிப்தில் தவிக்கும் இந்தியர்களை விமானத்தில் இந்தியா அழைத்து வருதல், சோமாலியா கடற்கொள்ளையர்களிடம் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்பது ஆகிய 5 பிரச்சினைகள் பற்றி எஸ்.எம்.கிருஷ்ணா என்னிடம் விளக்கம் அளித்தார். அவரது விளக்கம் திருப்தி அளிப்பதாக இருந்தது.

வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் இலங்கைக்கு சென்று, இலங்கை தமிழர் பிரச்சினை மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சினை பற்றி பேசினார் என்றும், இந்த பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்ததாகவும் என்னிடம் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.

இலங்கை தமிழர் பிரச்சினையும், தமிழக மீனவர் பிரச்சினையும் தமிழக சட்டமன்ற தேர்தலில் முக்கியமாக பிரதிபலிக்கும். மேலும் கட்சி ரீதியாக தமிழ்நாட்டின் பொறுப்பை நான் ஏற்று இருப்பதால், இதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன்.

இலங்கை தமிழர் நிவாரண பணிக்காக இதுவரை ரூ.500 கோடி இலங்கைக்கு கொடுத்து இருப்பதாகவும், இன்னும் தேவைப்பட்டால் கொடுக்க தயார் என்றும், என்னிடம் எஸ்.எம்.கிருஷ்ணா  தெரிவித்தார்.

{qtube vid:=L42N8bG65vY}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...