இலங்கை பிரச்சனை சுஷ்மாவை சந்தித்த எஸ்.எம்.கிருஷ்ணா

டெல்லி: தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் தொடர் தாக்குதல் விவகாரம் குறித்து லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக முன்னணித் தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜை நேரில்சந்தித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா விளக்கம் அளித்துள்ளார்.

நேற்று சுஷ்மா சுவராஜின் வீட்டுக்கு எஸ்.எம்.கிருஷ்ணா சென்றார். சுஷ்மாவிடம் தமிழக மீனவர் பிரச்சினை உள்ளிட்ட 5

முக்கியப் பிரச்சினைகள் குறித்து மத்திய அரசின் நடவடிக்கை குறித்து விளக்கினார்.

சமீபத்தில் தமிழக மீனவர் பிரச்சினையை ஐ.நா. சபைக்குக் கொண்டு போகப் போவதாக பாஜக தலைவர் நிதின் கத்காரி சென்னையில் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் சுஷ்மாவை கிருஷ்ணா நேரில் சந்தித்து விளக்கம் தெரிவித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதுகுறித்து சுஷ்மா சுவராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் போது அவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்வது, இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு நிவாரண பணிகள், அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் கால்களில் கண்காணிப்பு கருவி மாட்டிய விவகாரம், எகிப்தில் தவிக்கும் இந்தியர்களை விமானத்தில் இந்தியா அழைத்து வருதல், சோமாலியா கடற்கொள்ளையர்களிடம் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்பது ஆகிய 5 பிரச்சினைகள் பற்றி எஸ்.எம்.கிருஷ்ணா என்னிடம் விளக்கம் அளித்தார். அவரது விளக்கம் திருப்தி அளிப்பதாக இருந்தது.

வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் இலங்கைக்கு சென்று, இலங்கை தமிழர் பிரச்சினை மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சினை பற்றி பேசினார் என்றும், இந்த பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்ததாகவும் என்னிடம் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.

இலங்கை தமிழர் பிரச்சினையும், தமிழக மீனவர் பிரச்சினையும் தமிழக சட்டமன்ற தேர்தலில் முக்கியமாக பிரதிபலிக்கும். மேலும் கட்சி ரீதியாக தமிழ்நாட்டின் பொறுப்பை நான் ஏற்று இருப்பதால், இதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன்.

இலங்கை தமிழர் நிவாரண பணிக்காக இதுவரை ரூ.500 கோடி இலங்கைக்கு கொடுத்து இருப்பதாகவும், இன்னும் தேவைப்பட்டால் கொடுக்க தயார் என்றும், என்னிடம் எஸ்.எம்.கிருஷ்ணா  தெரிவித்தார்.

{qtube vid:=L42N8bG65vY}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்த� ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் … கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்க ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம் பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பி ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை � ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது 'கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலை� ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ...

மருத்துவ செய்திகள்

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...