மோடியை கண்மூடித்தனமாக தாக்குவதிலேயே காங்கிரஸ் குறியாக உள்ளது

 பாஜக.,வின் தேசிய செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி தந்தார் . அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சி, எவ்வித யோசனையும் இன்றி குஜராத் அரசு மற்றும் நரேந்திரமோடியை கண்மூடித்தனமாக தாக்குவதிலேயே குறியாக உள்ளது . இது காங்கிரஸ் கட்சியின் தோல்வியை வெளிச்சம் போட்டு காட்டுவதாகவே

உள்ளது. வறுமைக் கோட்டு நிலையை நிர்ணயிப்பது மத்திய அரசின் வேலையாகும். குஜராத் அரசு இதனை நிர்ணயிக்கவில்லை. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவது குறித்து குஜராத் மாநில அரசு, 2004-ம் ஆண்டிலிருந்து மத்திய அரசுக்கு எழுதிய எந்த கடிதத்துக்கும் இதுவரை எவ்விதபதிலும் இல்லை.

எனவேதான் நரேந்திர மோடி திட்டக் கமிஷனை கடுமையாக விமர்சனம்செய்தார். ஊழல் மலிந்த காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆம் ஆத்மிகட்சி ஆட்சியில் தொடர்ந்து வருகிறது. அவர்கள் வெளியிட்ட ஊழல் அரசியல்வாதிகளின் பட்டியலில் ஷீலா தீட்சித் பெயரை சேர்க்கும் தைரியம் அவர்களுக்கு கிடையாது. காங்கிரஸ்கட்சி மற்றும் அதன் தலைமை மீது இன்றுவரை ஆம் ஆத்மி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இப்போது மக்களிடம் ஆதாரங்கள் கேட்கிறார்கள். அப்படியானால், இவர்கள் ஆட்சிக்குவருவதற்கு முன்பு எவ்வித சாட்சியங்களும் இன்றி வெறுமனே குற்றச்சாட்டுகளை வீசிக்கொண்டிருந்தார்களா? டெல்லியில் பால்விலை, மின்சார கட்டணம் கடுமையாக உயர்ந்திருக்கிறது. ஆம் ஆத்மிகட்சியின் வாக்குறுதி என்னவாயிற்று? டெல்லியில் முறையாக ஆட்சி நடத்துவதைவிட்டு நாளுக்கொரு குற்றச்சாட்டை யார்மீதாவது எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் வீசிவருகிறது. முதலில் இவர்களது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இவர்கள் கவனம்செலுத்தட்டும் என்று நிர்மலா சீத்தாராமன் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...