நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளிக்கு தனிப்பட்டமுறையில் காங்கிரஸ் கட்சியே பொறுப்பு என பா.ஜ.க மூத்த தலைவர் அருண்ஜேட்லி குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சம்பவம், இந்திய மக்களாட்சிக்கு கெட்டபெயரை ஏற்படுத்தி விட்டது. இதற்கு, தனிப்பட்ட முறையில் காங்கிரஸ்கட்சியே பொறுப்பாகும். அவரது உறுப்பினர்களை காங்கிரஸ் தலைமையால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் நாடாளுமன்றத்தில் அவர்கள் விரும்பத்தகாத காட்சிகளை அரங்கேற்றிவிட்டனர். இதில் ஈடுபட்ட அனைத்து உறுப்பினர்களும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் என்று தெரிவித்தார்.
மேலும், மக்களவை நடவடிக்கைகளை முடக்குவதற்கு அபாயகரமான மற்றும் தடைசெய்யப்பட்ட உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டன. இது, இந்திய மக்களாட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டும், காங்கிரஸின் உறுப்பினர்கள் கட்டுப்படுத்தப்பட்டும் இருந்தால் இந்தசம்பவம் நடைபெறாமல் தடுத்து இருக்கலாம் என்று தெரிவித்த அவர், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக் காலத்தில் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், உத்தரகண்ட் மாநிலங்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டன. அப்போது அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளும் ஏற்கப்பட்டதால்தான் இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவில்லை என்று அருண்ஜேட்லி தெரிவித்தார்.
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.