பகத்சிங்கை பயங்கரவாதி என குறிப்பிடுவதா

 பிரிட்டனின் ஆராய்ச்சியாளர் ஒருவர் பகத்சிங்கை பயங்கரவாதி என குறிப்பிட்டதற்கு பாஜக. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வரும் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றால் பகத்சிங்கை சுதந்திரப் போராட்ட தியாகி என பிரிட்டனை குறிப்பிட வைப்போம் என்றும் பாஜக தெரிவித்து உள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஜக்ரானில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக. வின் பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பேசியதாவது _

பிரிட்டனில் பகத்சிங்கை பயங்கரவாதி என அழைப்பது நமக்கு மிக்கவேதனையையும், மன உளைச்சலையும் அளிக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில்ஆட்சிக்குவந்தால் பகத் சிங்கை பயங்கரவாதி என குறிப்பிட்டுள்ள மேற்கூறிய புத்தகத்தில் திருத்தம்செய்ய பிரிட்டனுக்கு நெருக்கடி கொடுப்போம். இதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவருவோம்.

காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்வரையில் ஊழலற்ற இந்தியாவை உருவாக்க முடியாது. வெளிநாடுகளில் உள்ள கருப்புப்பணத்தை இந்தியாவுக்கு திரும்பக் கொண்டு வரக்கோரி, பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி நாடுதழுவிய ரத யாத்திரையை மேற்கொண்டார்.

ஊழலை ஒழிக்க கடுமையான நடைமுறை கள் வகுக்கப்படவேண்டும் என்று கூறும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக அவர்களது ஆட்சிக்காலத்தில் என்ன செய்து கொண்டிருந்தார் ? என கேள்வி எழுப்பினார் ராஜ்நாத் சிங்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகண� ...

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்� ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் – மோகன் பகவத் ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழை ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழைந்து பதிலடி – அமித்ஷா பெருமிதம் 'சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவ� ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

மருத்துவ செய்திகள்

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...