பகத்சிங்கை பயங்கரவாதி என குறிப்பிடுவதா

 பிரிட்டனின் ஆராய்ச்சியாளர் ஒருவர் பகத்சிங்கை பயங்கரவாதி என குறிப்பிட்டதற்கு பாஜக. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வரும் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றால் பகத்சிங்கை சுதந்திரப் போராட்ட தியாகி என பிரிட்டனை குறிப்பிட வைப்போம் என்றும் பாஜக தெரிவித்து உள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஜக்ரானில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக. வின் பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பேசியதாவது _

பிரிட்டனில் பகத்சிங்கை பயங்கரவாதி என அழைப்பது நமக்கு மிக்கவேதனையையும், மன உளைச்சலையும் அளிக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில்ஆட்சிக்குவந்தால் பகத் சிங்கை பயங்கரவாதி என குறிப்பிட்டுள்ள மேற்கூறிய புத்தகத்தில் திருத்தம்செய்ய பிரிட்டனுக்கு நெருக்கடி கொடுப்போம். இதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவருவோம்.

காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்வரையில் ஊழலற்ற இந்தியாவை உருவாக்க முடியாது. வெளிநாடுகளில் உள்ள கருப்புப்பணத்தை இந்தியாவுக்கு திரும்பக் கொண்டு வரக்கோரி, பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி நாடுதழுவிய ரத யாத்திரையை மேற்கொண்டார்.

ஊழலை ஒழிக்க கடுமையான நடைமுறை கள் வகுக்கப்படவேண்டும் என்று கூறும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக அவர்களது ஆட்சிக்காலத்தில் என்ன செய்து கொண்டிருந்தார் ? என கேள்வி எழுப்பினார் ராஜ்நாத் சிங்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

என்எல்சி அதன் துணை நிறுவனங்களி ...

என்எல்சி அதன் துணை நிறுவனங்களில் ரூ.7,000 கோடி முதலீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்எல்சி) அதன் துணை ...

100 மாவட்டங்களில் பிரதமரின் தன-தா ...

100 மாவட்டங்களில் பிரதமரின் தன-தானிய வேளாண் திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (16.07.2025) ...

பகுதி நேர ஆசிரியர் போராட்டம்: ந ...

பகுதி நேர ஆசிரியர் போராட்டம்: நயினார் நாகேந்திரன் ஆதரவு 'தேர்தல் நேரத்தில், நேரில் சென்று ஆசிரியர்களுக்கு ஆதரவு அளிப்பதும், ...

காவிதான் தமிழை வளர்த்தது கருப் ...

காவிதான் தமிழை வளர்த்தது கருப்பு வளர்க்கவில்லை: தமிழிசை ''காவிதான் தமிழை வளர்த்தது. கருப்பு வளர்க்கவில்லை,'' என, ...

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்த ...

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் மையமாக கல்வி இருக்க வேண்டும் என்று அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார் நமது நாடு வளர்ச்சியடைந்து வரும் நிலையில், நமது முதன்மைக் ...

மருத்துவ செய்திகள்

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...