மோடிக்கு வெற்றி! தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி! அதை அடைவதே நமது இலக்கு!

 எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல்முடிவுகள் இதுவரை சுதந்திர இந்தியாவில் ஏற்படாத முடிவுகளாக நம் கதவைத்தட்ட காத்திருக்கின்றன. ஊழல் மயமாகிவிட்ட ஐ.மு.கூட்டணி அரசை நடத்தும் காங்கிரஸ்கட்சி படுதோல்வி அடையப் போகிறது. அக்கட்சிக்கு இந்தியா முழுவதும் இரட்டை இலக்கவெற்றிதான் கிடைக்கும். நூறு இடங்களை நெருங்கமுடியாது என்று தில்லி வழக்குரைஞர் மாநாட்டில் வைகோ முழங்கியுள்ளார்.

புதுடில்லியில் தல்கோட்ரா உள்விளையாட்டு அரங்கத்தில், வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி தலைமையில், நரேந்திரமோடிக்காக வழக்குரைஞர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் வழக்குரைஞர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் வைகோ உரையாற்றியதாவது" இங்கு நடைபெறும் வழக்குரைஞர்கள் மாநாடு இந்தியாவின் அரசியல்வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக இடம்பெறும்.

புகழால் உயர்ந்த சிகரங்களை ஒருவர் அடையவேண்டுமெனில், 'சகாக்கள் தூங்கும் போதும், கண்விழித்துக் கடுமையாக உழைப்பதனால் மட்டுமே உயரமுடியும்' என்று கவிஞர் லாங் பெல்லோ பாடினார்.

நரேந்திரமோடி இத்தகைய கீர்த்தியை அடைந்ததற்கு அவரது கடுமையான உழைப்பும், மக்களுக்காக செய்த அர்ப்பணிப்புச்சேவையும், அஞ்சாத துணிச்சலும், பொதுவாழ்வில் எவறும் குற்றம்சொல்ல இயலாத நேர்மையுமே காரணம் ஆகும்.

எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தல் முடிவுகள் இது வரை சுதந்திர இந்தியாவில் ஏற்படாத முடிவுகளாக நம் கதவைத்தட்ட காத்திருக்கின்றன. ஊழல் மயமாகிவிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை நடத்தும் காங்கிரஸ்கட்சி படுதோல்வி அடையப்போகிறது. அக்கட்சிக்கு இந்தியாமுழுவதும் இரட்டை இலக்க வெற்றிதான் கிடைக்கும். நூறு இடங்களை நெருங்க முடியாது. ஆனால் நரேந்திர மோடிக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கினால், பாஜக மட்டுமே ஆட்சி அமைக்கத் தேவையான 272 இடங்களுக்கும் அதிகமான வெற்றிகிடைக்கும்.

மறு மலர்ச்சி பெறுகிற இந்தியாவாக, புதிய விடியல்காணும் இந்தியாவாக, நரேந்திரமோடி அமைக்கின்ற அரசு வார்ப்பிக்கும் என நம்புகிறேன். மாநிலங்களுக்கு உரிய உரிமைகளையும், அதிகாரங்களையும் வழங்குகின்ற கூட்டாட்சி கொள்கைக்கு மோடி அரசு உத்தரவாதம் தரவேண்டுகிறேன். தரும் என நம்புகிறேன். அனைத்து சமயங்களையும் சமமாக மதித்து நடத்துகின்ற மதச்சார்பற்ற தன்மையை மோடி அரசு பாதுகாக்கவேண்டும் எனக் கோருகிறேன். பாதுகாக்கும் என நம்புகிறேன். அமையப்போகும் மோடி அரசு, நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டுகிறேன்.

தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்தமட்டில், காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் மன்னிக்கமாட்டோம். இலங்கை தீவில் இலட்சக் கணக்கான தமிழர்களை, சிங்கள ராஜபக்சே அரசு இனப் படுகொலை செய்வதற்கு ஆயுதங்களைத் தந்து, அனைத்து உதவிகளையும் செய்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை, அதற்குத் தலைமையேற்ற காங்கிரஸ்கட்சியை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்.

அடல்பிஹாரி வாஜ்பாய் தலைமை அமைச்சராக இருந்தபோது, 'இலங்கை தீவில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசுக்கு இந்திய அரசு எந்த உதவியும் செய்யாது, ஆயுதங்களையும் விற்காது' என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரகடனம்செய்தார். நாளை மலரப்போகின்ற நரேந்திரமோடி அரசு, ஈழத்தமிழர் பிரச்சினையில் வாஜ்பாய் அவர்களின் அணுகு முறையை பின்பற்ற வேண்டுகிறேன்.

நரேந்திர மோடிக்கு வெற்றி! தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி! அதை அடைவதே நமது இலக்கு!" என வைகோ உரையாற்றினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...