இந்த வெற்றி தான் நாளைய பாரதத்தை பலமடங்கு வலிமை படுத்த போகிறது

உபியில் பாஜகவின் வெற்றி என்பது சாதரணமாக கொண்டாடியோ அல்லது வெறுத்தோ கடக்கிற விஷயமல்ல. ஹிந்துக்களின் தன்னம்பிக்கை, ஒற்றுமை, தேசத்தின்பாதுகாப்பு, வளர்ச்சி என எல்லாவற்றையும் உள்ளடக்கிய, பல நூற்றாண்டுகள் பேசப்படப்போகும் வரலாற்றுச் சந்தி.

2014 நாடாளுமன்றம், 2017 உ.பி சட்டமன்றம், 2019 நாடாளுமன்ற வெற்றியை விட மிக முக்கியமானது 2022 உ.பி சட்டமன்ற வெற்றி. காரணம், உத்தரபிரதேசம் ஜாதிகளாலும், மதத்தாலும் பிளவுபட்டு கிடக்கும் பழம்பெரும் மாநிலம். இந்தியாவின் ஹிருதயம், சகதிக்குள் அமிழ்ந்து கிடந்ததுபோன்ற நிலைதான் இருந்தது.

எப்போதுமே நான் சொல்வதுதான் “ராமஜென்ம பூமி – மண்டல் – தாராளமயமாக்கல்” இந்த முக்கூட்டுதான் நவீன இந்தியாவின் அரசியலை ஆதிக்கம் செலுத்துகிறது. இது மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டது.இதை அங்கே ஒருமடாதிபதியை முன்னிறுத்தி, பொருளாதார வளர்ச்சி – சமூக நீதி அரசியலை இந்துத்துவ குடையின் கீழ் கொண்டுவந்து வாக்குகளாக மாற்றமுடியும்; அதோடு நிலைத்த ஆட்சியை தரமுடியும் என்பதெல்லாம், எளிமையான விஷயமல்ல.

பிரபு ஸ்ரீராமர் அயோத்திக்கு வந்த நிகழ்வைப்போல, ஒவ்வொரு ஹிந்துக்களின், இந்தியர்களின் மனநிலையும் இருக்கவேண்டிய வெற்றி இது. இந்த வெற்றி தான் நாளைய பாரதத்தை பலமடங்கு வலிமையானதாகவும், அதனுடைய அரசியல் ஓட்டத்தின் தெளிவையும் விரிவுபடுத்தப் போகிறது..

“வளர்ச்சி – கலாச்சார பெருமை – பாதுகாப்பு” இதற்கு கிடைத்தவெற்றியை, தர்மத்தின் கண்கொண்டு பார்க்க தெரியாதவர்கள் எதிர்கால களத்தில் கௌரவ சேனை போல வீழ்ந்தழிவார்கள்..

– சுந்தரராஜ சோழன் –

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.