ராகுலின் கருத்து ஓட்டை பலூனில் காற்றை நிரப்புவதற்கு சமம்

 காங்கிரஸ் வெற்றி பெறும் என்று ராகுல் கூறுவது ஓட்டை பலூனில் காற்றை நிரப்புவதற்கு சமம் என்று சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார்.

வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 200 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்று கடந்த சிலநாட்களுக்கு முன்னர் அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி நம்பிக்கை தெரிவித்திருந்தார். இதனை விமர்சித்து சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ் தாக்கரே தனது கட்சிப் பத்தரிக்கையான சாம்னாவில் தலையங்கம் எழுதியுள்ளார்.

”நாடெங்கும் காங்கிரசுக்கு எதிரான அலைவீசுகிறது. மக்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியை விரும்பவில்லை. இந்நிலையில் ராகுல்காந்தி இவ்வாறு கூறியிருப்பது மிகப் பெரிய அதிர்ச்சியளிக்கிறது. இது அவரின் தாயார் சோனியாகாந்திக்கும் அதிர்ச்சி அளித்திருக்கும்.

காங்கிரஸ் வெற்றி பெறும் என்று ராகுல்கூறுவது ஓட்டை பலூனில் காற்றை நிரப்புவதற்குசமம். மாறாக நரேந்திரமோடி தலைமையின் கீழ் பாஜக கூட்டணியானது 275 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறும். கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி தேர்தலுக்கு பின்னர் காணாமல் போய்விடும்” என்று உத்தவ்தாக்கரே விமர்சனம் செய்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...