வலுவான கூட்டணி அமைந்த போது எல்லையற்ற மகிழ்ச்சிக்கு ஆளானேன்

 ம.தி.மு.க தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,

நடைபெறவுள்ள 16வது நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயககூட்டணி வெற்றிபெறும். நான் 1ம் தேதி இதே அரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, நாடெங்கும் நரேந்திரமோடி அலைவீசுகிறது. பா.ஜ.க தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி பெரும்பாண்மை பெற்று மத்தியில் ஆட்சியமைக்கும். அதுமட்டுமல்ல தேர்தலுக்கு முன்போ அல்லது பின்போ, காங்கிரஸ் ஆதரவைபெற்றோ அல்லது காங்கிரசுக்கு ஆதரவுதந்தோ ஆட்சி அமைவதற்கு முனையக்கூடும் என எந்த கட்சிகளை நாங்கள் கருதுகிறோமோ அந்தக் கட்சிகளோடு எந்த காரணத்தைகொண்டும் நாங்கள் உடன்பாடு வைத்துக் கொள்ளமாட்டோம். பஞ்சாப்பில் அகாளிதளம் எப்படி பா.ஜ.க.,வோடு ஒரு உடன்பாடு வைத்துள்ளதோ, அந்நிலைப்பாட்டை தமிழகத்தில் ம.தி.மு.க பின்பற்றும் என்று குறிப்பிட்டேன்.

இந்த உடன்பாடு வருவதற்கு பாடுபட்டவர் தமிழருவிமணியன். மேலும் அனைத்து தரப்பினரிடமும் பேசிய மிகப் பெரிய அணியாக வருவதற்கு பாடுபட்டவர் பா.ஜ.க மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களும் இந்தகூட்டணியில் இணையவேண்டும் என்று விருப்பம் தெரிவித்தேன். அப்போதுதான் இந்த கூட்டணி வலுவாக இருக்கும். நாடுமுழுவதும் நரேந்திரமோடி அலை வீசுகிற நேரத்தில் தமிழகத்தில் இந்த அணியும் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் அணி அமையவேண்டும் என்று விரும்பினேன். அப்படிப்பட்ட அணி அமைந்து ராஜ்நாத்சிங் கடந்த 20ஆம் தேதி அறிவித்த போது நான் எல்லையற்ற மகிழ்ச்சிக்கு ஆளானேன். என்று கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.