நாட்டில் ஏற்பட்டுள்ள அனைத்து சீரழிவுகளுக்கும் பிரதமர் மன்மோகன் சிங்கை போன்றே, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும், துணைத் தலைவர் ராகுல்காந்தியும் காரணம் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது. பாஜக வெளியிட்ட, மத்திய அரசுமீதான குற்றச்சாட்டுக்கள் அடங்கிய அறிக்கைகளில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக 2 அறிக்கைகளை தயாரித்த பாஜக அவற்றை வெளியிட்டுள்ளது . இது குறித்து பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது , பிரதமர் பதவிக்கான கண்ணியத்தை காக்க மன்மோகன்சிங் தவறிவிட்டார். அவரது இந்தசமரசம் காரணமாகவே, சோனியா காந்தியும், ராகுல்காந்தியும் வெளிப்படையாகவே அரசு நிர்வாகத்தில் தலையிட்டனர். ஒருநிறுவனத்தின் தலைமை செயல்அதிகாரி போன்று மன்மோகன்சிங் செயல்படுகிறார் ,
அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களை போல சோனியாகாந்தியும், ராகுல்காந்தியும் செயல்பட்டுள்ளனர் . பொருளாதாரம், வேலைவாய்ப்பு, தொழில்வளர்ச்சி, தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு என்று அனைத்திலும் மன்மோகன்சிங் தலைமையிலான அரசு பின் தங்கியிருப்பதாக ரவிசங்கர் பிரசாத் குற்றம் சுமத்தியுள்ளார் .
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |
Leave a Reply
You must be logged in to post a comment.